ராஜா ராணி 2 சீரியலிலிருந்து அர்ச்சனா விலகியது ஏன்? இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி-2 சீரியலில் வில்லியாக நடித்துவரும் அர்ச்சனா தான் சீரியலை விட்டு விலகுவதாக இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Aug 28, 2022, 01:03 PM IST
  • ராஜா ராணி சீரியலில் இருந்து அர்ச்சனா விலகல்.
  • அடுத்தகட்டத்திற்கு நகர்வதாக இன்ஸ்டாவில் பதிவு.
  • ரசிகர்கள் அவருக்கு உருக்கமான பதிவு.
ராஜா ராணி 2 சீரியலிலிருந்து அர்ச்சனா விலகியது ஏன்? இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு! title=

விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது, அதில் பலரும் விரும்பி பார்க்கும் சீரியலில் ஒன்று 'ராஜா ராணி-2'.  ராஜா ராணி முதல் பாகம் முடிந்து இரண்டாம் பாகம் ஓடிக்கொண்டு இருக்கிறது, முதல் பாகத்தில் சஞ்சீவ்-ஆல்யா மானசா நடித்திருந்தனர்.  இதில் ஆல்யா, சஞ்சீவை சின்னய்யா என்று கூப்பிடுவது பிரபலமானது, இந்த தொடரின் மூலம்  சஞ்சீவ்-ஆல்யா காதலர்களாக மாறி திருமணமும் செய்துகொண்டனர்.  பின்னர் தற்போது ஒளிபரப்பாகும் ராஜா ராணி-2 தொடரில் ஆரம்பத்தில் ஆல்யா மானசா தான் ஹீரோயினாக நடித்தார், ஆனால் கதாநாயகனாக சஞ்சீவ் நடிக்கவில்லை அவருக்கு பதிலாக சித்து நடித்து வந்தார்.  இந்த தொடர் ஹிந்தியில் ஒளிபரப்பான என் கணவன் என் தோழன் சீரியலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.  விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருந்த இந்த சீரியலில் இருந்து ஆல்யா மானசா விலகியது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

ஆல்யா மானசாவுக்கு குழந்தை பிறந்ததால் அவரால் இந்த சீரியலில் தொடர முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் அவரது கதாபாத்திரத்தில் தற்போது ரியா நடித்துக்கொண்டிருக்கிறார்.  தற்போது ஆல்யாவை தொடர்ந்து அந்த சீரியலில் வில்லியாக நடித்துக்கொண்டிருந்த அர்ச்சனா சீரியலை விட்டு விலகியுள்ளார்.  இவரது வில்லி கதாபாத்திரம் பலருக்கும் பிடிக்கும், இந்த சீரியலில் ஹீரோயினுக்கு எந்தளவு வரவேற்பு இருக்கிறதோ அதேயளவு வில்லியாக நடிக்கும் அர்ச்சனாவுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.  இவரை பற்றிய கிசுகிசுக்களும் அடிக்கடி வெளியானது, பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் அருணும், அர்ச்சனாவும் காதலிப்பதாகவும், இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாகவும் செய்திகள் இணையத்தில் வட்டமடித்த நிலையில் தற்போது இவர் சீரியலிலிருந்து விலகிய செய்திகள் இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.

மேலும் படிக்க | நயன்தாராவின் ஃபிட்னஸ் மற்றும் பியூட்டியின் ரகசியம் இதுதானா?

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Archana R (@vj_archana_)

மேலும் தான் சீரியலிலிருந்து விலகும் செய்தியை அர்ச்சனாவே அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தின் மூலமாக ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.  அதில்அனைவரும் நலமாக இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன், வாழ்க்கை நமக்கு ஒரு பை நிறைய ஆச்சர்யங்களை வைத்திருக்கும்.  என் வாழ்க்கையில் அடுத்தகட்டத்தை நோக்கி நான் செல்ல வேண்டிய நேரம் இது என்று நினைக்கிறன், ஆமாம் நான் ராஜா ராணி-2 சீரியலை விட்டு விலகுகிறேன், அந்த குழுவினரை நான் மிஸ் செய்கிறேன்.  எனக்கு ஆதரவளித்த ராஜா ராணி-2 குழுவினருக்கு பெரிய்ய நன்றிகள் மற்றும் அன்றிலிருந்து இன்றுவரை எனக்கு அன்பையும் ஆதரவையும் தந்துகொண்டிருக்கும் உங்களுக்கும் நன்றி.  என்னுடைய புதிய தொடக்கத்திற்கும் நீங்கள் அன்பையும், ஆதரவையும் தருவீர்கள் என்று நம்புகிறேன், லவ் யூ ஆல்.  என்று பதிவிட்டு இருக்கிறார்.

மேலும் படிக்க | விடுதலை படத்தில் வெற்றிமாறனுடன் இணைந்த மற்றொறு இயக்குனர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News