சந்தியா ராகம்: மாயாவிடம் சிக்கிய ஆட்டோ ட்ரைவர்.. ரகுராமால் காத்திருந்த ஷாக்

Sandhya Raagam Serial: மாயாவிடம் சிக்கிய ஆட்டோ ட்ரைவர்.. ரகுராமால் காத்திருந்த ஷாக் - சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட் வெளியாகி உள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Dec 13, 2023, 12:16 PM IST
  • இந்த சீரியல் தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும்.
  • இதனை Zee5 தளத்திலும் நீங்கள் பார்க்கலாம்.
  • வாரத்தின் அனைத்து நாள்களிலும் ஒளிபரப்பாகிறது.
சந்தியா ராகம்: மாயாவிடம் சிக்கிய ஆட்டோ ட்ரைவர்.. ரகுராமால் காத்திருந்த ஷாக் title=

Sandhya Raagam Serial Today's Episode: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் (Zee Tamil Serial) ஒளிப்பரப்பாகி வரும் சீதாராமன், நளதமயந்தி, மாரி, அண்ணா, கார்த்திகை தீபம், மீனாட்சி பொண்ணுங்க போன்ற தொடர்களும் பார்வையாளர்களிடம் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. அதில், சந்தியா ராகம் சீரியலும் பரவலான கவனத்தை பெற்றுள்ளது. சந்தியா ராகம் சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. 

மாயாவிடம் சிக்கிய ஆட்டோ ட்ரைவர்.. ரகுராமால் காத்திருந்த ஷாக் - சந்தியா ராகம் இன்றைய எபிசோட் அப்டேட் :

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சந்தியா ராகம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மாயாவும் தனமும் ஷாப்பிங் போக கோவிலில் இருந்து எஸ்கேப் ஆன நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மேலும் படிக்க | கமலை ஓரம் கட்டும் பிக்பாஸ்! 5 நடிகர்களை தேர்வு செய்துள்ள நிறுவனம்!

அதாவது, இவர்கள் ஓடி வரும் போது ரகுராம் எதிரே பைக்கில் வர தனம் அப்பாவை பார்த்ததும் மறைந்து கொள்கிறாள். மாயா எதுக்கு ஒளியுற என்று கேட்க தனம் அப்பா என்று பதற மாயா கூப்பிடட்டுமா என்று மிஸ்டர் ரகுராம் என்று சத்தம் போட தனலட்சுமி மாயாவின் வாயை பொத்தி விட ரகுராம் சென்றதும் இருவரும் சிரித்து கொள்கின்றனர். பிறகு தனம் அம்மா தான் வருத்தப்படுவாங்க என்று சொல்ல உங்க அம்மா நம்பர் 1 அடிமை என்று சொல்கிறாள். உங்க குடும்பம் மொத்தமும் டைம் ட்ராவல் மூலமாக 20 வருஷம் பின்னாடி போன மாதிரி இருக்கு என பேசுகிறாள்.

இதனை தொடர்ந்து இருவரும் நடந்து வரும் போது மாயாவிடம் தவறாக நடக்க முயன்ற ஆட்டோ ட்ரைவர் சிக்கி விட மாயா அவனை பிடித்து உன்னை சும்மா விட மாட்டேன் என்று தரதரவென இழுத்து வர அவன் விட்டுடுங்க என்று மன்னிப்பு கேட்டும் மாயா விட மறுக்கிறாள். ஒருகட்டத்தில் இவன் தப்பி ஓட எதிரே ரகுராம் வர அவனது பைக்கில் போய் மோதி விழுகிறான். 

பிறகு ரகுராம் யாருடா நீ எதுக்கு ஓடி வந்து விழுற என்று கேட்க பின்னாடி துரத்தி வரும் மாயாவை கை காட்ட அதற்குள் மாயா ஒளிந்து கொள்கிறாள். அங்கு யாருமே இல்லையே என்று கேட்க பிறகு தனம் ஓடி வருவதை பார்த்த ஆட்டோ ட்ரைவர் திரும்பவும் கை காட்ட இந்த முறை ரகுராம் பார்ப்பதற்குள் மாயா தனத்தை இழுத்து ஒளித்து விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

மேலும் படிக்க | சூர்யாவிற்கு திடீர் என நன்றி தெரிவித்த இயக்குனர் அமீர்! ஏன் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News