அமுதாவும் அன்னலட்சுமியும்: செந்திலுக்கு பறி போன கண் பார்வை? அமுதாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Amudhavum Annalakshmiyum August 16 Update: செந்திலுக்கு பறி போன கண் பார்வை? அமுதாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி - அமுதாவும் அன்னலட்சுமியும் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Aug 16, 2023, 12:34 PM IST
  • அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது?
  • அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.
  • இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.
அமுதாவும் அன்னலட்சுமியும்: செந்திலுக்கு பறி போன கண் பார்வை? அமுதாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி title=

அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியல் அப்டேட்: தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘அமுதாவும் அன்னலட்சுமியும்' சீரியல்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அமுதாவும் அன்னலட்சுமியும். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் செந்தில் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்த நிலையில் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மேலும் படிக்க | ரூ.400 கோடி வசூலை தாண்டிய ஜெயிலர்.. அதுவும் 6 நாளில்

அதாவது, செந்திலின் வீட்டிற்கு வீட்டின் ஓனர் வந்து வீட்டை விக்கலாம்னும் முடிவு பண்ணிட்டேன் என சொல்ல அனைவரும் ஷாக்காகின்றனர். வேற யாருக்கோ குடுக்குறதுக்கு நீங்களே வாங்கிக்கோங்களேன் என சொல்ல, அன்னம் தங்களிடம் அவ்வளவு பணம் இப்போதைக்கு இல்லை என சொல்கிறாள். 

அமுதா அவரிடம் எங்க மாமா வாழந்த கோவில் இது, எங்களுக்கு கொஞ்சம் டைம் குடுங்க நாங்களே வாங்கிக்கிறோம் என சொல்ல வீட்டு ஓனர் வெளியே வர, பழனி எதிரே வருகிறான். 

உங்க வீட்டை நானே வாங்கிக்கிறேன் என சொல்ல ஓனர் அன்னலட்சுமியிடம் வாக்கு குடுத்து விட்டதாக சொல்ல பழனி அவங்க கிட்ட அவ்வளவு பணம் கிடையாது என சொல்லி, அட்வான்ஸ்சை வாங்கிக்கோ என சொல்லி பணத்தை நீட்டுகிறான். ஓனர் எனக்கு அதெல்லாம் வேண்டாம் என சொல்லிவிட்டு செல்கிறார்.

அதை தொடர்ந்து செந்திலுக்கு அமுதா மாத்திரை கொடுக்க செந்தில் அவளிடம் உன் மடியில் படுத்துக் கொள்ள வேண்டுமென என சொல்லி அவள் மடியில் படுத்துக் கொள்கிறான். 

அமுதா புத்தகத்தை எடுத்து பேக்கில் வைக்கப் போக, செந்தில் அமுதா எங்க இருக்க, எனக்கு திடீர்ன்னு கண்ணு தெரியலை என சொல்ல அமுதா சும்மா விளையாடாதீங்க என சொல்ல, செந்தில் தனக்கு உண்மையிலேயே கண் தெரியவிலை என சொல்கிறான். இதனால் அமுதா அலறி அடித்தபடி அன்னலட்சுமியையும் மாணிக்கத்தையும் கூப்பிடுகிறாள்‌. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அமுதாவும் அன்னலட்சுமியும் சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

அமுதாவும் அன்னலட்சுமியும்: சீரியலை எங்கு பார்ப்பது

அமுதவும் அன்னலட்சுமியும் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது.

மேலும் படிக்க | ஒரு வழியா வெளியான அப்டேட்… அஜித்தின் விடாமுயற்சி குறித்து சூப்பர் தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News