Travel to Mars: பூமியிலிருந்து செவ்வாய்க்கு 45 நாட்களில் பயணம்! சாத்தியமாக்கும் புதிய தொழில்நுட்பம்

பூமியிலிருந்து செவ்வாய்க்கு 45 நாட்களில் பயணித்தை சாத்தியமாக்கும் புதிய தொழில்நுட்பமானது சிவப்பு கிரகத்திற்கான பயண நேரத்தை வெகுவாக குறைக்கிறது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 18, 2022, 08:46 AM IST
  • செவ்வாய் கிரகத்திற்கு 45 நாட்களில் செல்லலாம்!
  • புதிய தொழில்நுட்பத்தால் குறையும் பயண நேரம்
  • சிவப்பு கிரகத்திற்கான பயண நேரத்தை குறைக்கும் புதிய தொழில்நுட்பம்
Travel to Mars: பூமியிலிருந்து செவ்வாய்க்கு 45 நாட்களில் பயணம்! சாத்தியமாக்கும் புதிய தொழில்நுட்பம் title=

பூமியிலிருந்து செவ்வாய்க்கு 45 நாட்களில் பயணித்தை சாத்தியமாக்கும் புதிய தொழில்நுட்பமானது சிவப்பு கிரகத்திற்கான பயண நேரத்தை வெகுவாக குறைக்கிறது.

ஆச்சரியமாக இருந்தாலும் இது சாத்தியமாகும் உண்மை என்று உறுதியளிக்கின்றனர் விஞ்ஞானிகள். 45 நாட்களுக்குள் செவ்வாய் கிரகத்தை அடைவது இப்போது சாத்தியமாகும், இது நீண்ட நாட்களாக அறிவியல் ஆர்வலர்களின் கனவாக இருந்துவந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

கனடா நாட்டைச் சேர்ந்த எஞ்சினியர்களின் கூற்றுப்படி, செவ்வாய் கிரகத்தை அடைவதற்கான லேசர் அடிப்படையிலான தொழில்நுட்பம் பயண நேரத்தை வெகுவாகக் குறைக்கும்.

தற்போதைய நிலவரப்படி ஒருவர் செவ்வாய் கிரகத்தை அடைய சுமார் 500 நாட்கள் ஆகும் என்று நாசா கணித்துள்ளது.

மேலும் படிக்க | செவ்வாய் கிரகத்தின் புதிய படங்கள்! இது சீனாவின் ஆர்பிட்டர் செல்ஃபி!

தற்போது கனடாவில் உள்ள McGill பல்கலைக்கழகத்தின் பொறியாளர்கள், ஹைட்ரஜன் எரிபொருளை சூடாக்க லேசர்களைப் பயன்படுத்தும் "லேசர்-வெப்ப உந்துவிசை" தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறுகின்றனர்.

இந்த தொழில்நுட்பத்தால், பயண நேரத்தை அதிகபட்சமாக  45 நாட்கள் வரை குறைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

அமெரிக்க விண்வெளி நிறுவனம் செவ்வாய் கிரகத்திற்கு 2030 களின் நடுப்பகுதியில் ஒரு குழுவை அனுப்ப விரும்புகிறது, அதே நேரத்தில் சிவப்பு கிரகம் என்று பெயர் பெற்ற செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்ப சீனாவும் திட்டமிட்டுள்ளது.

மேலும் படிக்க | வேற்று கிரகவாசிகள் மர்மத்தை தீர்க்க, ஆன்மீகவாதிகளை நாடும் நாசா

தற்போதைய தொழில்நுட்பம் "இயக்கப்பட்ட ஆற்றல் உந்துவிசை" (directed-energy propulsion) என்று அழைக்கப்படுகிறது. இது பூமியிலிருந்து எடுக்கப்பட்ட மகத்தான லேசர்களைப் பயன்படுத்தி ஒரு விண்கலத்தில் உள்ள ஒளிமின்னழுத்த பேனல்களுக்கு ஆற்றலை அனுப்புகிறது, இது மின்சாரம் மற்றும் உந்துதலை உருவாக்குகிறது.

பூமிக்கு அருகில் இருக்கும் போது, ​​விண்கலம் வேகமாக முடுக்கி, பின்னர் செவ்வாய் கிரகத்தை நோக்கி செல்கிறது, விண்கலத்தின் பிரதான வாகனத்தை செவ்வாய் கிரகத்தில் தரையிறக்குவதற்கு விடுவிக்கும் விண்கலம்,  மீதமுள்ளவற்றை அடுத்த ஏவுதலுக்காக மறுசுழற்சி செய்ய பூமிக்கு திருப்பி அனுப்புகிறது.

ஆறு வாரங்களில் செவ்வாய் கிரகத்தை அடைவது என்பது, அணுசக்தியால் இயங்கும் ராக்கெட்டுகளால் மட்டுமே  முடியும் என்று முன்பு கருதப்பட்டது, அது அதிக கதிர்வீச்சு அபாயங்களை ஏற்படுத்தும் என்ற நிலையில், தற்போதைய தொழில்நுட்பம் செவ்வாய்க்கான பயண நேரத்தை குறைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது.

மேலும் படிக்க | வைரலாகும் நாசாவின் விண்வெளி மர்ம வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News