Viral Video: ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய ‘நபர்’ காயம் ஏதும் தப்பித்த அதிசயம்!

உத்தரபிரதேச மாநிலம் எட்டாவாவில் உள்ள பர்தானா ரயில் நிலையத்தில், ஒரு நபர் மீது ரயில் கடந்து செல்லும் அதிர்ச்சி வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 10, 2022, 04:27 PM IST
  • உத்தரபிரதேச மாநிலம் எட்டாவாவில் உள்ள பர்தானா ரயில் நிலையத்தில் நடந்த சம்பவம்.
  • இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்படுகின்றன.
  • ரயில் வந்து கொண்டிருக்கும் போது தண்டவாளத்தில் அந்த நபர் விழுந்திருக்கலாம்
Viral Video: ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய ‘நபர்’ காயம் ஏதும் தப்பித்த அதிசயம்! title=

சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோக்கள் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன. அந்த வகையில், ரயில் தண்டவாளத்திற்கும், நடைமேடைக்கும் இடையில் சிக்கிக் கொண்ட நபர் காயம் ஏதும் இல்லாமல் தப்பித்ததைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது. 

உத்தரபிரதேச மாநிலம் எட்டாவாவில் உள்ள பர்தானா ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒரு நபர் மீது ரயில் கடந்து செல்லும் அதிர்ச்சி வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. அதில் அதிசயம் என்னவென்றால், அதன் பிறகு அந்த நபர் தனது உடலில் ஒரு கீறல் கூட இல்லாமல் நடந்து சென்றார் என்பது தான்.

மேலும் படிக்க | Viral Video: மாணவிகளின் குடுமிபிடி சண்டை; யுத்த களமாக மாறிய வகுப்பறை! 

வைராகும் வீடியோவை கீழே காணலாம்:

பிளாட்பாரத்தில் நின்று பயணி ஒருவர் படம்பிடித்து வெளியிட்ட காணொளியில், ரயில் கடந்து செல்லும் இடத்தின் அருகே பலர் கூடியிருப்பதை காண முடிந்தது. முதலில், ரயில் கிட்டத்தட்ட ஒரு நிமிடம் அவரைக் கடந்து செல்வதால் நீங்கள் அவரை காண முடியாது. அந்த வீடியோவில், அந்த நபர் பிளாட்பாரத்திற்கும், தண்டவாளத்திற்கு இடையில் இருந்த நிலையில், இருக்கும் இடத்திலேயே இருக்குமாறும், நகர வேண்டாம் என்றும் மக்கள் சத்தமாக கூறுவதைக் காணலாம்.

ரயில் நிலையத்தைத் தாண்டிய பிறகு, அந்த நபர் எழுந்து, தன்னை உயிருடன் வைத்திருக்கும் கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கைகளை குவித்து வணங்குவதையும் காணலாம். சம்பவத்தை பார்த்த ரயில் நடை மேடையில் இருந்தவர்கள், அந்த நபர் காயமின்றி தப்பித்ததை பார்த்து நிம்மதியாக பெருமூச்சு விட்டனர். அவர் மூலையில் படுத்திருந்த நிலையில், அந்த நபரின் உடைமைகள் தண்டவாளத்தில் கிடப்பதைக் காண முடிந்தது. ரயில் வந்து கொண்டிருக்கும் போது தண்டவாளத்தில் அந்த நபர் விழுந்திருக்கலாம் என தெரிகிறது.

மேலும் படிக்க | Viral News: ஒரு ரூபாய்க்கு புடவை; அலைமோதிய பெண்கள்; திணறிய விற்பனையாளர்கள்!

மேலும் படிக்க | Viral video: ஆக்கிரோஷமாக தாக்கும் கீரி; எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் நாகம்!

மேலும் படிக்க | மானை இறுக்கும் மலைப்பாம்பு; சிக்கித் தவிக்கும் மான்... ஆனால்... நடந்தது என்ன..!! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News