அழகாய் அமர்ந்து அமர்க்களமாய் மெஹந்தி வைத்துக்கொள்ளுக்கும் குரங்கு: செம கியூட் வைரல் வீடியோ

Viral Video: குரங்குகளுக்கான அத்தனை இலக்கணங்களையும் இந்த சின்ன குரங்கு மீறி விட்டது. பல பேருக்கு மத்தியில் அமைதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மிகவும் பொறுமையாக மெஹந்தி இட்டுக் கொள்ள குரங்கு தன் கையை காட்டுகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 14, 2024, 02:43 PM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் jassi____mehra123 and gaggi_mehr என்று கணக்கில் பகிரப்பட்டுள்ளது.
  • இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.
  • இணையவாசிகள் இதற்கு பலவித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
அழகாய் அமர்ந்து அமர்க்களமாய் மெஹந்தி வைத்துக்கொள்ளுக்கும் குரங்கு: செம கியூட் வைரல் வீடியோ title=

Viral Video: சமூக ஊடக தளங்களில் நாம் பல வித வீடியோக்களை காண்கிறோம். இவற்றில் பெரும்பாலானவை நம்மை வியக்க வைக்கும் வகையிலும், ஆச்சரியப்பட வைக்கும் வகையிலும் உள்ளன. பொதுவாகவே இணையவாசிகள் விலங்குகளின் வீடியோக்களை அதிகம் விரும்பி பார்க்கிறார்கள். சமீபத்திலும் ஒரு வீடியோ நெட்டுசன்களின் உள்ளத்தை கவர்ந்துள்ளது. அந்த வீடியோவை பற்றி இங்கே காணலாம்.

திருமண நிகழ்ச்சிகளில் பெண்கள் மருதாணி இட்டுக்கொள்வதை நாம் அடிக்கடி பார்த்துள்ளோம். திருமணம் மட்டுமின்றி பொதுவாகவே பெண்களுக்கு மருதானி வைத்துக் கொள்ள மிகவும் பிடிக்கும். மருதாணி வைத்துக் கொள்வதால் பலவித ஆரொக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன. மருதாணி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை பெண்களுக்கு மட்டுமல்ல எனக்கும் உள்ளது என்று ஒரு குரங்கு காட்டியுள்ளது. அந்தக் குரங்கு பொறுமையாக மருதாணி இட்டுக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வேகமாக வைரலாகி வருகின்றது.

மெஹந்தி இட்டுக்கொள்ளும் குரங்கு 

வீடியோவில் ஒரு சிறிய குரங்கு படுக்கையில் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்பதை பார்க்க முடிகின்றது . அதன் கைகளில் மெஹந்தி கலைஞர்கள் சிலர் மருதாணி வைக்க தொடங்குகின்றனர். குரங்கு மிகவும் பொறுமையாக அவர்களிடம் தன் கையை காட்டுகின்றது. ஒரு கையில் மெஹந்தி இட்டவுடன் அந்த கையை பார்க்கும் குரங்கு அதை பார்த்து ஆச்சரியம் அடைகின்றது. மெஹந்தி மிக அழகாக இருப்பது அதற்கு மிகவும் பிடித்துள்ளது என்பதை அதன் முக பாவம் மூலம் புரிந்துகொள்ள முடிகின்றது.

அழகாய் அமர்ந்து அமர்க்களமாய் மருதாணி இட்டுக்கொள்ளும் குரங்கின் வீடியோவை இங்கே காணலாம்:

பொதுவாகவே குரங்குகள் ஓரிடத்தில் இருப்பதில்லை, அங்கும் இங்கும் அலைந்து கொண்டே இருக்கின்றன. அதேபோல் மக்கள் அருகில் அவை வந்தால் அவர்களின் கையில் இருக்கும் பொருட்களை பிடுங்கி வீசுவது அவற்றுக்கு பழக்கமான ஒன்று. ஆனால் குரங்குகளுக்கான அத்தனை இலக்கணங்களையும் இந்த சின்ன குரங்கு மீறி விட்டது. பல பேருக்கு மத்தியில் அமைதியாக இருப்பதோடு மட்டுமல்லாமல் மிகவும் பொறுமையாக மெஹந்தி இட்டுக் கொள்ள குரங்கு தன் கையை காட்டுகிறது. இந்த வீடியோவை காணும் அனைவருக்கும் இந்த விஷயம் மிகவும் ஆச்சரியமாக உள்ளது.

மேலும் படிக்க | குதிரைக்கும் காமெடியான ஹேர்கட்! இது நிலைமையை பாத்தீங்களா..வைரல் வீடியோ

பொறுமையாக மெஹந்தி இட்டுக் கொள்ளும் இந்தக் குரங்கு இணையவாசிகளின் இதயத்தை கவர்ந்து விட்டது என்றே கூறலாம்.

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் jassi____mehra123 and gaggi_mehr என்று கணக்கில் பகிரப்பட்டுள்ளது. எனினும், இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பது பற்றி தெரியவில்லை. இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பலவித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

'குரங்கி மிக அழகாக உள்ளது' என ஒருவர் எழுதியுள்ளார். 'குரங்குக்கு பொறுமையாக மெஹந்தி இடும் கலைஞர்களை பாராட்ட வேண்டும்' என மற்றொருவர் கமெண்ட் செய்துள்ளார். 'குரங்கால் இவ்வளவு அமைதியாக இருக்க முடியுமா' என ஒரு பயனர் அச்சரியத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். 

மேலும் படிக்க | இது எங்க ஏரியாவாக்கும்... ட்ராபிக் ஜாமை ஏற்படுத்தி கெத்து காட்டிய சிங்கங்கள்...

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News