வீட்டில் தனிமையை சமாளிக்க பிரபல நடிகை செய்த அருமையான காரியம்!!

வீட்டில் தனிமையாக முடங்கிப் போய் இருப்பதால் நடிகை மஹிமா நம்பியார் ஓவியம் வரைய ஆரம்பித்துள்ளார்!!

Last Updated : Mar 28, 2020, 08:56 PM IST
வீட்டில் தனிமையை சமாளிக்க பிரபல நடிகை செய்த அருமையான காரியம்!!  title=

வீட்டில் தனிமையாக முடங்கிப் போய் இருப்பதால் நடிகை மஹிமா நம்பியார் ஓவியம் வரைய ஆரம்பித்துள்ளார்!!

கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது உங்கள் வீட்டில் தங்குவது வைரஸ் பரவுவதைத் தவிர்ப்பதற்கான சிறந்த மற்றும் ஒரே வழியாகும். அனைத்து அலுவலகங்களும் கடைகளும் மூடப்பட்ட நிலையில், சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டு, பல ஆண்டுகளாக கடிகாரத்தை சுற்றி படப்பிடிப்பு நடத்தி வரும் பிரபலங்கள் தங்களை தங்கள் வீட்டிற்குள்லேயே அடைந்து கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

கோலிவுட்டின் ஹீரோக்கள் பொருத்தமாக இருப்பதில் கவனம் செலுத்துகையில், கதாநாயகிகள் சில சிறிய வீட்டு வேலைகள், சமையல் மற்றும் சில ஓவியங்களைச் செய்வதன் மூலம் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். அவர்களில் மாகமுனி நடிகை மஹிமா நம்பியார் தற்போது சுவர் ஓவியத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக ஒரு வீடியோவை அவர் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து அவர், “தனிமைப்படுத்திக் கொள்ள இந்த நேரத்தில் எனக்குள் இருந்த பிக்காசோ வெளியே வருகிறார்.  உங்களுக்கு ஒரு சுவர், ஒரு பென்சில் மட்டுமே தேவை” எனக் கூறியுள்ளார். பலரும் அவரது முயற்சியைப் பாராட்டி வருகின்றனர். 

Trending News