பாம்புக்கு முத்தம் கொடுத்து உதட்டில் கடி வாங்கிய நபர்; பதைபதைக்க வைக்கும் வீடியோ

கர்நாடகாவில் நாக பாம்புக்கு முத்தம் கொடுத்து உதட்டில் கடிவாங்கிய நபரின் பதைபதைக்க வைக்கும் வீடியோ காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 3, 2022, 10:30 AM IST
  • கர்நாடகாவில் நாகப்பாம்பிடம் கடிவாங்கிய நபர்
  • முத்தம் கொடுக்க சென்றபோது கொத்தியது
  • காண்போரை பதைபதைக்க வைக்கும் வீடியோ
பாம்புக்கு முத்தம் கொடுத்து உதட்டில் கடி வாங்கிய நபர்; பதைபதைக்க வைக்கும் வீடியோ title=

கர்நாடகாவில் பாம்பு மீட்பவர் ஒருவர் நாகப் பாம்பிடம் கடி வாங்கும் வீடியோ காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த சம்பவம் அம்மாநிலத்தின் சிவமோஹா மாவட்டத்தில் உள்ள, பத்ராவதியில் நடைபெற்றுள்ளது. பாம்புகளை பிடிப்பதில் கைதேர்ந்தவரான அந்த நபர், நாகப்பாம்பு ஒன்றை மீட்டவுடன் அந்த பாம்புக்கு முத்தம் கொடுக்க முயற்சித்துள்ளார். பாம்பு கடிக்கும் என்பது அவருக்கு தெரிந்திருந்தும், விளையாட்டாக செய்த காரியம் வினையாக முடிந்தது. அவர் முத்தம் இட முயற்சிக்கும்போது நொடிப்பொழுதில் அந்த பாம்பு அவரின் உதட்டை தீண்டிவிட்டு வேகமாக ஓடுகிறது.

மேலும் படிக்க | பாம்புக்கும் முதலைக்கும் செம சண்டை: இப்படி ஒரு சண்டைய பார்த்திருக்க முடியாது

அவரை சுற்றி வேடிக்கை பார்த்தவர்கள் மிகுந்த அதிர்ச்சியுடன் விலகிச் செல்ல, மற்றொரு நபர் ஓடிய பாம்பை மீண்டும் பிடித்து சீண்டல் விளையாட்டை அரங்கேற்றுகிறார். அப்போது, திடீரென படம்மெடுத்து பாம்பு எழுந்திருப்பதைக் கண்டு திகைத்த அந்த இளைஞர் சில அடி தூரம் நகர்ந்துவிட்டு மீண்டும் ஓடும் பாம்பின் பின்னால் சென்று அதனை பிடிக்கிறார். சுமார் 30 வினாடிகள் இருக்கும் இந்த வீடியோவை அவர்களுடன் இருந்த நபரே பதிவு செய்திருக்கிறார். டிவிட்டரில் மட்டும் சுமார் 2 ஆயிரம் பார்வைகளைப் பெற்றிருக்கும் அந்த வீடியோ, ஸ்நேக் இந்தியா என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. 

நாகப் பாம்பு கடிக்கும் வீடியோவை பார்த்த நெட்டிசன்களும் தங்களின் பயத்தையும், அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளனர். பாம்புகளிடம் ஏன் இவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள்?, விளையாடுவதற்கு பாம்பு தான் அவர்களுக்கு கிடைத்ததா? வீரம் காட்ட எத்தனையோ விஷயங்கள் இருந்தும் பாம்பு பிடிப்பதையும், பாம்புக்கு முத்தம் கொடுப்பதையெல்லாம் யார் வீரம்? என கூறுவார்கள் என கடிந்து கொண்டுள்ளனர். பாம்புகளுக்கு தொந்தரவு கொடுக்கும் இதுபோன்றவர்களை கண்டிப்பு செய்ய வேண்டும் என்றும் சிலர் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க | Viral Video: புத்தகப் பையில் கருநாகம்... அதிர்ச்சியில் உறைந்த மாணவி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News