பாம்பிற்கே தண்ணி காட்டிய நபர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!

தாகத்தில் இருந்த பாம்பு ஒன்றுக்கு ஒரு நபர் தண்ணீர் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.    

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 15, 2022, 12:58 PM IST
  • பாம்பின் தாகத்தை தீர்த்த மனிதர்.
  • வாட்டர் பாட்டிலில் நீரை ஊற்றி தாகம் தீர்த்தார்.
  • இணையத்தில் குவியும் பாராட்டுகள்.
பாம்பிற்கே தண்ணி காட்டிய நபர்! இணையத்தில் வைரலாகும் வீடியோ!  title=

பாம்பு என்றால் படையே நடுங்கும் என்கிற பழமொழியை கேள்விப்பட்டிருப்போம்.  இறந்துபோன பாம்பை பார்த்தாலே பலரும் பத்து அடி தள்ளி நிற்பார்கள், அந்த அளவிற்கு பாம்பின் மீது பலருக்கும் பயம் இருக்கும்.  ஆனால் சிலருக்கு பாம்பின் மீது பிரியம் இருக்கும், சிலர் பாம்பை கடவுளாகவும் வழிபட்டு வருகின்றனர்.  தற்போது பாம்பின் தாகத்தை தீர்க்க ஒருவர் செய்த செயல் தான் இணையத்தை ஈர்த்து வருகிறது, பாம்பிற்கு பாலுக்கு பதிலாக தண்ணீர் வார்த்து அதன் தாகத்தை தணித்தால் இணையத்தில் அந்த நபருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க | என் ஆளு வந்துட்டா! எமோஷனாகும் மாப்பிள்ளையின் வீடியோ வைரல்..

இந்த வீடியோவை இந்திய வன சேவை அதிகாரி சுஷாந்த் நந்தா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.  அதில் 'கோடை காலம் நெருங்குகிறது, உங்கள் சில துளிகள் ஒருவரின் உயிரைக் காப்பாற்றும். உங்கள் தோட்டத்தில் சிறிது தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வைத்து விடுங்கள், அது பல விலங்குகளின் வாழ்க்கை மற்றும் இறப்பை காப்பாற்றும் என்கிற கேப்ஷனையும் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவில், கருப்பு நிற உடை அணிந்துகொண்டு ஒருவர் நிற்பதைக் காணலாம்.  அவரது அருகில் ஒரு பச்சை நிற பாம்பும் உள்ளது.  அந்த நபர் ஒரு கையில் தண்ணீர் பாட்டிலையும், மற்றொரு கையில் தண்ணீரையும் ஊற்றுகிறார்.  அவரது உள்ளங்கையில் உள்ள நீரை அந்த பச்சை நிற பாம்பு அருந்துகிறது.  அந்த பாம்பு தண்ணீரை குடிக்க குடிக்க அந்த நபர் தனது மற்றொரு கையிலுள்ள பாட்டிலில் இருந்து நீரை ஊற்றிக் கொண்டிருக்கிறார்.

 

இந்த காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.  பாம்பு தன்னைத் துன்புறுத்தி அவர்களை மட்டும்தான் துன்புறுத்தும், தன்னை சீண்டாதவர்களை எதுவும் செய்யாது என்பதற்கு இந்த வீடியோ ஒரு சான்றாக அமைந்துள்ளது.  இந்த நபரின் செயலை சிலர் பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர், சிலர் கவனமாக கையாளுங்கள் என்றும் கூறி வருகின்றனர்.  இருப்பினும் இத்தகைய நச்சுத் தன்மையுள்ள பாம்புகளை கையாள்வதில் மிக கவனமுடன் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க | மானிடம் தோற்றுப்போன சிறுத்தை வைரல் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News