‘ஓடிடுடா கைப்புள்ள..’: நாய்களுக்கு பயந்து நைசா ஜகா வாங்கின சிங்கம், ஷாக்கில் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

Rare Animal Video: இப்படிகூட நடக்குமா என நம்மை ஆச்சரியப்படுத்தும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதில் மிக ஆச்சரியமான விஷயம் ஒன்று நடக்கின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 23, 2023, 12:13 PM IST
  • நாய் மிகவும் நன்றியுள்ள விலங்கு.
  • நாயின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.
  • தன் சொந்த ஏரியாவில் ஒரு நாயும் சிங்கத்தைப் போலதான்.
‘ஓடிடுடா கைப்புள்ள..’: நாய்களுக்கு பயந்து நைசா ஜகா வாங்கின சிங்கம், ஷாக்கில் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ  title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

நாய் மிகவும் நன்றியுள்ள விலங்கு. நாயின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. தன் சொந்த ஏரியாவில் ஒரு நாயும் சிங்கத்தைப் போலதான். அதற்கு அந்த இடத்தில் அதிக பலம் இருக்கிறது. பொதுவாகவே பலமற்ற நபர்களும் தங்கள் சொந்த இடங்களில் பலமுள்ளவர்களாகவே இருக்கிறார்கள். 

இதை வெளிக்காட்டும் ஒரு வீடியோ தற்போது காட்டுத் தீ போல் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தெருவில் சில தெருநாய்கள் சிங்கத்தை பாடாய்படுத்துவது போன்ற காட்சி உள்ளது. இதைப் பார்த்த பயனர்கள் மிகவும் ஆச்சரியப்படுகிறார்கள்.

சிங்கம் பொதுவாக காட்டின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. அதன் சக்திக்கு முன்னால் மிகப்பெரிய விலங்குகளாலும் ஒன்றும் செய்ய முடிவதில்லை. புலிகள், சிறுத்தைகள் போன்ற காட்டின் பயங்கரமான வேட்டையாடும் விலங்குகள் சிங்கம் வருவதைக் கண்டால் தங்கள் வழியை மாற்றி வேறு வழி செல்கின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், நாயின் முன் சிங்கம் தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு ஓடுவதைப் பார்ப்பது எவருக்கும் ஆச்சரியமான காட்சியாக இருக்கும். குஜராத்தில் உள்ள கிர் சோம்நாத் கிராமத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | Viral Video: முதல் அடி எடுத்து வைக்க போராடும் குட்டியானை! வேதனையுடன் பதறும் தாய் யானை!

சிங்கத்தை துரத்திய நாய்கள்

குஜராத்தில் இருந்து சிங்கங்களின் பல வீடியோக்கள் வெளிவந்துள்ளன. இவற்றில் சிங்கங்கள் மனித குடியிருப்புகளுக்கு மிக அருகில் ஓய்வெடுப்பதையும், பலமுறை இரை தேடி கிராமத்திற்குள் நுழைவதையும் பார்த்திருக்கிறோம். தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், இரவின் இருட்டில் சிங்கம் ஒன்று இரை தேடி கிராமத்திற்குள் நுழைவதைக் காண முடிகின்றது. அப்போது அந்த கிராமத்தில் உள்ள தெருநாய்கள் சிங்கத்தை தாக்குகின்றன. நாய்களின் ஆக்ரோஷத்தை பார்த்து சிங்கம் அங்கிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடுகின்றது. 

வீடியோவைப் பார்த்த பயனர்கள் அதிர்ச்சியடைந்தனர்

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது பல சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இந்த வீடியோ ட்விட்டரில் ‘We The People' என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். பலர் இந்த வீடியோவை பார்த்து சிங்கத்தை கிண்டலடிக்கிறார்கள். 

மேலும் படிக்க | வைரல் வீடியோ: திடீர் என்டிரி கொடுத்த கருஞ்சிறுத்தை.... திகைத்த சுற்றுலாப் பயணிகள்: என்ன நடந்தது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News