வீட்டுக்குள் நுழைந்து பாடாய் படுத்திய நாகப்பாம்பு: பீதியைக் கிளப்பும் வைரல் வீடியோ

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 2, 2021, 04:17 PM IST
வீட்டுக்குள் நுழைந்து பாடாய் படுத்திய நாகப்பாம்பு: பீதியைக் கிளப்பும் வைரல் வீடியோ title=

King Cobra Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் (Viral Video) ஆகின்றன.  சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள், குறிப்பாக பாம்புகளின் வீடியோக்கள் (Snake Video) இணையத்தை கலக்கி வருகின்றன. அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ அனைத்து சமூக தளங்களிலும் பரவி வருகிறது.

இந்த வீடியோவில் ஒரு வீட்டின் சமையலறைக்குள் ஒரு ஆபத்தான நாகப்பாம்பு ஒன்று மறைந்திருப்பதைக் காண முடிகின்றது.

அந்த சமையலறைக்குள் அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் செல்கிறார். அங்கு பாம்பு (Snake) இருப்பதைப் பார்த்த அவர் அச்சத்தின் உச்சிக்கு சென்று அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடுகிறார். இதைத்தொடர்ந்து, குடும்பத்தினர் அனைவரும் பயத்தில் உடனடியாக வீட்டை விட்டு வெளியே சென்று கதவை வெளியில் இருந்து அடைத்து சாத்துகிறார்கள். பின்னர், பாம்பைப் பிடிக்க, பாம்பு பிடிக்கும் நபர் ஒருவர் வரவழைக்கப்படுகிறார்.

ALSO READ: Covid Vaccine: கொரோனா ஊசி போட்டுக் கொள்ள மறுத்து சாமியாடி சாதித்த பாட்டி 

பாம்பு பிடிப்பவர் வீட்டிற்குள் நுழைந்தவுடன், பாம்பு காஸ் சிலிண்டருக்குப் பின்னால் மறைந்துகொள்வதை வீடியோவில் காணலாம். இதற்குப் பிறகு வீடியோவில் காணப்படும் காட்சிகள் நம்மை மிரட்டும் வகையில் உள்ளன.

பாம்பு பிடிப்பவர் பாம்பை வெளியே எடுக்க முயன்றவுடன், அது தன் ஆட்டத்தைக் காட்டத் துவங்குகிறது. இதைப் பார்த்து அந்த நபரும் சற்று அசந்து விடுகிறார்.

பாம்பு வெளியே வந்தவுடனேயே கட்டுப்பாடு இல்லாமல் நடந்துகொள்வதையும், தொடர்ந்து கொத்த முயற்சி செய்வதையும் காண முடிகின்றது. பாம்பின் இந்த ஆக்ரோஷமான நடவடிக்கையைப் பார்த்து, ’இந்த பாம்பு செம காண்டில் இருக்கிறது’ என பாம்பு பிடிப்பவரும் கூறுகிறார்.

எனினும், இந்த வேளையில் அந்த நபர், நாகப்பாம்பு தொடர்பான சில முக்கிய தகவல்களையும் கொடுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த நாகப்பாம்பை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அவர், அதைப் பிடித்து பிளாஸ்டிக் பெட்டியில் அடைத்தார்.

அந்த திக் திக் வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோ எப்போது, ​​​​எங்கு எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. எனினும், இந்த வீடியோ வைரலாகி (Viral Video) வருகிறது. MIRZA MD ARIF என்ற சேனலில் YouTube இல் இந்த வீடியோ பதிவேற்றப்பட்டது. இந்த வீடியோவை இதுவரை மூன்று கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்த வீடியோவுக்கு நெட்டிசன்கள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர்.

ALSO READ: கட்டிங் அண்ட் ட்ரிம்மிங் செய்ய அமர்த்தலாய் சலூனுக்கு வந்த குரங்கின் வைரல் வீடியோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News