இன்று முதல் 3 ராசிக்காரர்களுக்கு பிறந்தது அதிர்ஷ்டம் - வாழ்க்கை இனி தலைகீழாக மாறும்

மேஷ ராசியில் புதன் அஷ்தமித்திருப்பதால், 3 ராசிக்காரர்களுக்கு இன்று முதல் அதிர்ஷ்டம் பிறந்திருக்கிறது. கல்வி, செல்வம் உள்ளிட்டவைகள் தானாக உங்களை வந்து சேரும்.      

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 23, 2023, 05:34 AM IST
இன்று முதல் 3 ராசிக்காரர்களுக்கு பிறந்தது அதிர்ஷ்டம் - வாழ்க்கை இனி தலைகீழாக மாறும் title=

ஜோதிடத்தில் செல்வம், புத்திசாலித்தனம், பேச்சு, வணிகம் ஆகியவற்றுக்கு அதிபதியாக இருப்பவர் புதன். ஒருவரின் ஜாதகத்தில் புதன் வலுவாக இருந்தால், அந்த நபர் கூர்மையான எண்ணம் கொண்டவராகவும், நல்ல பேச்சாளராகவும், பொருளாதார ரீதியாக வலிமையாகவும் இருப்பார். தொழிலில் இறங்கினால், பெரிய தொழிலதிபராக மாறுவார். 

இத்தகைய பலன்களை கொண்டிருக்கும் புதன் 23 ஆம் தேதி ஏப்ரல் 2023 இரவு மேஷ ராசியில் அஸ்தமித்திருக்கிறார். புதனின் அமைவு அனைத்து ராசிக்காரர்களின் புத்திசாலித்தனம், பேச்சு, தொழில், பொருளாதார நிலை ஆகியவற்றில் சுப அல்லது அசுப விளைவுகளை ஏற்படுத்தும் நிலையில், இப்போது 3 ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது. 

மேலும் படிக்க | அட்சய திருதியை 2023: இந்த நேரத்தில் தங்கம் வாங்கினால் செல்வம் பெருகுவது கேரண்டி
 
தலைவிதியை மாற்றும் புதன்

மேஷம்

புதன் கிரகம் மேஷ ராசியிலேயே அமைவதால் இந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரும். இவர்கள் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள். வியாபாரம் வளரும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். இந்த வாய்ப்புகளை நீங்கள் பயன்படுத்திக் கொண்டால், நீங்கள் பெரும் லாபத்தைப் பெறுவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்கு அதிபதியான புதன் இந்த ராசிக்காரர்களுக்கு எப்போதும் அமோக பலன்களைத் தருகிறார். புதன் அஸ்தமனம் செய்தாலும் மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தருவார். எல்லா வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் பெரிய வெற்றி கிடைக்கும். பணம் வரவு சாதகமாக இருக்கும். நீங்கள் செல்லும் பாதையில் உங்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பு வரலாம். தொழிலதிபர்கள் போட்டியாளர்களுக்கு கடும் போட்டி கொடுத்து வெற்றி பெறுவார்கள். புத்திசாலித்தனம் மற்றும் பேச்சால் ஆதாயம் கிடைக்கும்.
 
கன்னி

புதன் அஸ்தமனம் கன்னி ராசிக்காரர்களுக்கு மரியாதையையும் கௌரவத்தையும் தரும். நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருந்தால், நிச்சயமாக அதைச் செய்யுங்கள். ஏனென்றால் அதிலிருந்து நீங்கள் சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள். முதலீடு மூலம் லாபம் உண்டாகும். யோசித்து செய்யும் அபாயகரமான முதலீடுகளும் லாபத்தைத் தரும். வேலை நன்றாக நடக்கும். உங்கள் பேச்சின் வலிமைக்கு ஏற்ப செயல்படுவீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | அக்ஷய திருதியன்று எல்லோரும் தங்கம் வாங்க வேண்டியதில்லை..! உங்க ராசிக்கு இந்த உலோகம் வாங்குங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News