டிசம்பர் 19 முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும்: 3 சுப யோகங்களால் மகிழ்ச்சி மழை

Safala Ekadashi 2022:  இந்த ஆண்டு மார்கழி தேய்பிறை ஏகாதசியன்று ஒரே நேரத்தில் 3 மங்களகரமான யோகங்கள் உருவாகின்றன. இந்த 3 சுப யோகங்கள் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 15, 2022, 06:51 PM IST
  • சஃபல ஏகாதசியில் தனுசு ராசியில் உருவாகும் 3 சுப யோகங்கள் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகின்றது.
  • இவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.
  • ஏகப்பட்ட பண வரவு இருக்கும்
டிசம்பர் 19 முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும்: 3 சுப யோகங்களால் மகிழ்ச்சி மழை title=

மார்கழி மாத சஃபல ஏகாதசி 2022: மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி இரண்டும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அதில் தேய்பிறை ஏகாதசி டிசம்பர் 19 ஆம் தேதி வருகிறது. இந்த தினத்தில் ஏகாதசி விரதம் இருப்பது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த ஏகாதசியில் சஃபல ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பதும், விதிகள் மற்றும் விதிமுறைகளின்படி இந்த நாளில் விஷ்ணுவை வழிபடுவதும் அனைத்து காரியங்களில் வெற்றி கிடைக்கச்செய்யும். 

இந்த ஆண்டு சஃப்ல ஏகாதசி 19 டிசம்பர் 2022 அன்று வருகிறது. இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு மார்கழி தேய்பிறை ஏகாதசியன்று ஒரே நேரத்தில் 3 மங்களகரமான யோகங்கள் உருவாகின்றன. புதாதித்ய யோகம், லக்ஷ்மி நாராயண யோகம் மற்றும் திரிகிரஹி யோகம் ஆகியவற்றின் காரணமாக, சஃபல ஏகாதசியின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு மார்கழி மாத தேய்பிறை ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது பல மடங்கு பலன்களை தரும்.

4 ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம்

சஃபல ஏகாதசியில் தனுசு ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம், லக்ஷ்மிநாராயண யோகம் மற்றும் திரிகிரஹி யோகம் ஆகிய இந்த 3 சுப யோகங்கள் 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகின்றது. இவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். ஏகப்பட்ட பண வரவு இருக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு இந்த சுப யோகமும், சஃபல ஏகாதசியும் அதிக பலன்களை அளிக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்: 

சஃபல ஏகாதசி அன்று உருவாகும் 3 சுப யோகங்களால் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் உண்டாகும். பெரிய நிதி நன்மைகள் கிடைக்கும். தொழிலில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். எந்த ஒரு பெரிய வேலையும் பேச்சாற்றலால் எளிதாக நடக்கும். திருமணம் நிச்சயிக்கப்படலாம்.

மேலும் படிக்க | தனுசு ராசியில் சூரியன்; இந்த ‘6’ ராசிகளின் பொன்னான நாட்கள் ஆரம்பம்! 

துலாம்: 

டிசம்பர் 19, 2022 அன்று உருவாகும் 3 சுப யோகங்கள் துலாம் ராசிக்காரர்களின் உறங்கும் அதிர்ஷ்டத்தை எழுப்பும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான வெற்றியை பெறுவார்கள். பதவி-பணம்- கௌரவம் கிடைக்கும். நிறுத்தப்பட்ட வேலைகள் நடக்கும்.

தனுசு: 

சஃபல ஏகாதசி அன்று, தனுசு ராசியில் 3 சுப யோகங்களின் அற்புதமான கலவை உருவாகிறது. தனுசு ராசிக்காரர்கள் அதன் மூலம் அதிகபட்ச பலனைப் பெறுவார்கள். இவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் இருக்கும். பதவி உயர்வு, பண வரவு இருக்கும். மரியாதை அதிகரிக்கும். அனைத்து வகையிலும் லாபம் இருக்கும்.

மீனம்: 

மீன ராசியின் பொன்னான நாட்கள் தொடங்கும். வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். பதவி உயர்வு ஏற்படலாம். உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு கிடைக்கும் பெரிய வாய்ப்பு உங்கள் வாழ்க்கையை மாற்றும். பண வரவு சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 2023 புத்தாண்டு ராசிபலன்: அடுத்த ஆண்டின் அதிர்ஷ்டக்கார ராசிகள் இவைதான்!! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News