குரு - ராகு சேர்க்கையில் 3 ராசிகளுக்கு சண்டால யோகம்! கவனமாக இருப்பது அவசியம்

குரு மற்றும் ராகு சேர்ந்திருப்பது 3 ராசிகளுக்கு எதிர்மறையான யோகத்தை கொடுக்கப்போகிறது. இந்த நேரத்தில் கவனமாக இருந்தால் மட்டுமே ஆபத்தில் இருந்து தப்பிக்க முடியும்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 4, 2023, 07:45 PM IST
  • குரு ராகு சேர்க்கையால் உண்டாகும் சண்டால யோகம்
  • 3 ராசிகளுக்கு பிறக்கப்போகும் கெட்ட காலம்
  • மிகவும் கவனமாக இல்லை என்றால் இழப்புகள் இருக்கும்
 குரு - ராகு சேர்க்கையில் 3 ராசிகளுக்கு சண்டால யோகம்! கவனமாக இருப்பது அவசியம் title=

குரு - ராகு கிரங்களின் சேர்க்கை 3 ராசிகளுக்கு மிகப்பெரிய எதிர்மறை யோகத்தை கொடுக்க இருக்கிறது. ஏப்ரல் 22 ஆம் தேதி, மீனத்தை விட்டு மேஷ ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கப் போகிறார். அங்கு ஏற்கனவே நிழல் கிரகமான ராகு அமர்ந்திருக்கிறது. இப்போது இந்த இரண்டு கிரங்கங்களும் சேர இருப்பது சண்டால யோகத்தை உண்டாக்கும். ஜோதிட சாஸ்திரங்களின்படி சண்டால யோகம் நல்லதல்ல. 3 ராசிகளுக்கு மிகப்பெரிய பாதகமான காலத்தை இந்த இரு கிரங்கங்களின் சேர்க்கை கொடுக்கப்போகிறது.

மிதுனம்

ஜோதிட சாஸ்திரப்படி ஏப்ரல் 22-ல் மேஷ ராசியில் வியாழனும் ராகுவும் இணைகிறார்கள். இது மிதுன ராசிக்காரர்களுக்கு பல பிரச்சனைகளை உண்டாக்கும். இவர்களுக்கு குரு சாண்டல் யோகம் பாதகமான பலன்களை தரும். இந்த காலகட்டத்தில் பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த காலகட்டத்தில் எதிலும் முதலீடு செய்வதற்கு முன் கவனமாக சிந்தியுங்கள் அல்லது தவிர்க்கவும். இதுமட்டுமின்றி, பணப் பரிவர்த்தனைகளில் சிறிது நேரம் கவனமாக இருக்கவும்.

மேலும் படிக்க | ராகுவின் நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி, இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்

மேஷம்

சண்டால் யோகம் இந்த ராசிக்காரர்களுக்கு சற்றும் நன்றாக இருக்காது. ஏப்ரல் 22-ம் தேதிக்கு பிறகு இரண்டு கிரகங்களும் இந்த ராசியில்தான் இருக்கும். இத்தகைய சூழ்நிலையில், மேஷ ராசிக்காரர்களுக்கு தொடர்ந்து பிரச்சனைகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். அதே சமயம் முதலீட்டின் இப்போது நேரம் சரியில்லை. பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் கவனமாக வேலை செய்யுங்கள். எந்த விதமான விவாதத்திலிருந்தும் விலகி இருங்கள்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு சண்டால யோகம் சாதகமற்றதாக இருக்கும். எதிர்மறையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இந்த கூட்டணி இந்த ராசிக்காரர்களுக்கு ரொம்ப கெடுதல் செய்யும். ஒரு நபரின் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் எழலாம் மற்றும் ஒவ்வொரு அடியிலும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக பேச்சில் கட்டுப்பாடு தேவை. எதிரிகளிடம் கவனமாக இருக்கவும்.

மேலும் படிக்க | இன்னும் 15 நாட்கள்..இந்த ராசிகளுக்கு குவியப்போகும் மலையளவு பிரச்னை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News