கார்த்திகை பெளர்ணமியில் ‘இந்த’ 4 ராசிகளுக்கு அதிர்ஷட மழை அடிக்க போகிறது!

கார்த்திகை பெளர்ணமி நாள் வரப்போவதை அடுத்து, சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்பாேகிறது. யார் யாருக்கு தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : Nov 24, 2023, 10:54 PM IST
  • கார்த்திகை பௌர்ணமி நாள் கொண்டாடப்பட உள்ளது.
  • இந்த நாளில் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அடிக்க உள்ளது.
  • அந்த ராசிகள் யார் யார்?
கார்த்திகை பெளர்ணமியில் ‘இந்த’ 4 ராசிகளுக்கு அதிர்ஷட மழை அடிக்க போகிறது! title=

2023 ஆண்டிற்கான கார்த்திகை பௌர்ணமி நாள், வரும் 27ஆம் தேதி (நவம்பர்-திங்கள்கிழமை) வர இருக்கிறது. இந்த நாளில் பல நல்ல காரியங்களை முன்னோர்களுக்காகவும் தங்களுக்காகவும் செய்து கொள்வர். புண்ணிய நதிகளில் நீராடி, இல்லாதோருக்கு தானம் செய்வதாலும் பல வகைகளில் நன்மைகள் வந்து சேரும். இதை தாண்டி, லட்சுமி தேவி, விஷ்ணு உள்ளிட்ட தெய்வங்களை வணங்குவதாலும் வீட்டில் செல்வம் குவியும். இதனால் செல்வ செழிப்பும் பெருகும். இந்த நாளில் குறிப்பிட்ட 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை கொட்டப்போகிறது. அந்த ராசிகள் யார் யார்? இவர்களுக்கு எதனால், எந்த வகையில் பணம் வந்து சேரப்போகிறது? இங்கே பார்ப்போம். 

ராசிகளும் அதிர்ஷ்ட மழையும்..

மேஷ ராசி:

கார்த்திகை பௌர்ணமி நாளில், அதிர்ஷ்ட மழை கொட்டப்போகும் ராசிகளில் முதல் இடத்தில் இருப்பவர்கள், மேஷ ராசிக்காரர்கள். இவர்களுக்கு இந்த நாளில் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் சில காரியங்கள் நடைபெறும். இவர்கள், இந்த நாளில் நிதி முதலீடு தொடர்பான திட்டங்களை தீட்டலாம். இதனால் அவர்கள் முதலீடு செய்யும் தொழில்களில் பெரிய லாபம் ஏற்படும். இந்த நாளில் இவர்களுக்கு உடல் நிலை சீராகவும் வாய்ப்புகள் உள்ளது. 

ரிஷபம் ராசி:

கார்த்திகை பௌர்ணமியில் ரிஷப ராசிக்காரர்களுக்கு திருமண வாழ்கை இனிமையாக மாற வாய்ப்புகள் உள்ளது. இவர்களின் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இந்த தினத்தில், சிலருக்கு நிதி வகையில் ஆதாயம் அதிகமாக இருக்கும். இந்த நாளில் இவர்களுக்கு சிலர் சர்ப்ரைஸாக சில பரிசுகளையும் கொடுக்க வாய்ப்புகள் உள்ளது. 

மேலும் படிக்க | குரு உச்சம் செல்கிறார்.. இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்

கடக ராசி:

கார்த்திகை திருநாள், கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்ல நாளாக அமையும். எதிர்பாராத வகையில், நிதி வகையில் இவர்களுக்கு சில பெரிய மாற்றங்கள் ஏற்படும். இந்த மாற்றம், உங்கள் வங்கி கணக்கில் பல் மாற்றத்தை ஏற்படுத்தும். திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு திருமண யோகம் கைகூட வாய்ப்புகள் உள்ளது. இந்த நாளையடுத்து வாழ்க்கையில் செழுமைக்கும் மகிழ்ச்சிக்கும் பஞ்சமே இருக்காது. 

தனுசு ராசி:

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த கார்த்திகை பௌர்ணமி நாளில் பல பலன்கள் கை மேல் வந்து சேர உள்ளது. நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள், அவர்களுக்கு மேல் பணிபுரியும் அதிகாரிகளிடம் பாராட்டு பெற்று அவர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக மாறுவார்கள். இதனால் இவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்ப்பெறும். பௌர்ணமி நாளையடுத்து மரியாதை ரீதியாகவும், பெயர் ரீதியாகவும் செல்வாக்கு உயரும். இதை வைத்து வாழ்வில் உங்கள் மீது பகை உணர்வு கொண்டிருப்பவர்களை வெல்வீர்கள். பேச்சில் மட்டும் கவனம் தேவை. சரியான வார்த்தைகளை சண்டை மற்றும் விவாதங்களில் உபயோகிப்பது நல்லது. 

மேலும் படிக்க | 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி உச்சம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEata2J

Trending News