கண்தானம் செய்தார் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின்

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின். கடந்த ஆண்டின் சிறந்த ஐ.சி.சி. வீரர் விருதுக்கு தேர்வானார்.

Last Updated : Jan 8, 2017, 02:39 PM IST
கண்தானம் செய்தார் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் title=

சென்னை: இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரர்களில் ஒருவர் ஆர்.அஸ்வின். கடந்த ஆண்டின் சிறந்த ஐ.சி.சி. வீரர் விருதுக்கு தேர்வானார்.

சிறந்த டெஸ்ட் வீரர், ஆண்டின் சிறந்த வீரர் என இரண்டு ஐ.சி.சி. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள அஸ்வின் தனது கண்களை தானமாக செய்வதாக அறிவித்துள்ளார்.

ராஜன் கண் மருத்துவமனையில் நடந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் அவர் பங்கேற்று தனது கண்களை தானம் செய்வதாக அறிவித்து அதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார்.

 

 

நான் என் கண்களை தானம் செய்கிறேன். நீங்களும் கண்தானம் செய்யுங்கள் என்று அஸ்வின் தனது விழிப்புணர்வு பிரசாரத்தில் ரசிகர்களிடம் வற்புறுத்தி உள்ளார்.

Trending News