பொங்கி எழுந்த கோலி! அப்படி என்ன சொன்னார்?

நான் ஒன்றும் ரோபா இல்லை, என் சதையை கிழித்து பார்த்தால் ரத்தம் தான் வரும்.

Last Updated : Nov 16, 2017, 08:40 AM IST
பொங்கி எழுந்த கோலி! அப்படி என்ன சொன்னார்? title=

இந்திய அணி இலங்கையுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதல் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. 

இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விராட் கோலி,

ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி, ‘நான் ஒன்றும் ரோபோ இல்லை எனக்கும் ஓய்வு தேவைப்படுகிறது’ என கூறினார். இது குறித்து விராட் கோலி கூறியதாவது:-

பணிச்சுமை பற்றி பேசவேண்டியுள்ளது. வீரர்கள் ஓய்வெடுக்க வேண்டுமா இல்லையா என்பது பற்றி நிறைய பேச்சுகள் உள்ளது. விளையாட்டு வீரர்கள் ஏன் ஓய்வு கேட்கிறார்கள் என மக்கள் வெளியில் இருந்து கேட்பது தெரிகிறது. ஒவ்வொரு வீரர்களும் ஆண்டுக்கு சுமார் 40 போட்டிகளில் விளையாடுகின்றனர்.

அதில் அனைவரும் 45 ஓவர்கள் பேட்டிங் பிடிப்பதோ, 30 ஓவர்கள் பந்து வீசுவதோ இல்லை. சிலரே அவ்வாறு செய்கிறார்கள். அவர்களுக்கு ஓய்வு அளிக்கவேண்டியது அவசியம். 

மூன்று விதமான போட்டிகளில் விளையாடுபவர்கள் ஒரேவிதமான தன்மையைத் தக்கவைத்துக்கொள்ள முடியாது. எனக்கும் நிச்சயம் ஓய்வு தேவை. என் உடல் ஓய்வெடுக்க வேண்டும் என்று நினைக்கும்போது, நான் அதை செய்வேன். நான் ஒன்றும் ரோபா இல்லை, என் சதையை கிழித்து பார்த்தால் ரத்தம் தான் வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Trending News