நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து..!

இங்கிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்தியது.

Last Updated : Jul 4, 2019, 07:46 AM IST
நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து..! title=

இங்கிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்தியது.

கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி ரிவர்சைட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோவ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களை ஒரு பதம் பார்க்க அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 
இந்நிலையில், ஜேசன் ராய் ஆட்டமிழக்க, அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களிலேயே வெளியேறினர். இந்நிலையில் 50 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 305 ரன்களை எடுத்துள்ளது. அதிகபட்சமாக பெய்ர்ஸ்டோ 106 ரன்களும், ஜேசன் ராய் 60 ரன்கள் எடுத்தனர். 

இதனையடுத்து 306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக மார்ட்டின் குப்டில், ஹென்றி நிக்கோல்ஸ் களமிறங்கினர். அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஹென்றி நிக்கோல்ஸ் ரன் ஏதும் எடுக்காமலும், மார்ட்டின் குப்டில் 8 ரன்கள் எடுத்த நிலையிலும் வெளியேறினர். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய கேன் வில்லியம்சன் 27 ரன்னிலும், ரோஸ் டெய்லர் 28 ரன்னிலும் வெளியேற, பின்னர் வந்த டாம் லாதம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற 45 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 119 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

 

Trending News