Ind vs Eng 3rd T20I: ஷார்துல் தாகூர் ஃபீல்டிங்கில் மந்தமாக இருந்தது ஏன் - Virat Kohli

3வது டி 20 போட்டியின் போது ஃபீல்டிங்கில் மந்தமாக இருந்த ஷார்துல் தாகூரிடம் விராட் கோலி காட்டத்தை காட்டினா. போட்டியின் 12 வது ஓவரில், கோலி தனது பொறுமையை இழந்துவிட்டார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 17, 2021, 08:36 AM IST
Ind vs Eng 3rd T20I: ஷார்துல் தாகூர் ஃபீல்டிங்கில் மந்தமாக இருந்தது ஏன் - Virat Kohli title=

Ind vs Eng 3rd T20I: 3வது டி 20 போட்டியின் போது ஃபீல்டிங்கில் மந்தமாக இருந்த ஷார்துல் தாகூரிடம் விராட் கோலி காட்டத்தை காட்டினா. போட்டியின் 12 வது ஓவரில், கோலி தனது பொறுமையை இழந்துவிட்டார். ஷார்துல் தாகூரின் மந்தமான ஃபீல்டிங்கைத் தொடர்ந்து கடுப்பான விராட், காட்டத்தை வெளிப்படுத்தினார்.

நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி 20 போட்டியின் போது இந்திய கேப்டன் தனது இயல்பான குணத்தை மாற்றிக் கொள்ள வேண்டியிருந்தது.
 
களத்தில் உயர் தரத்தை நிர்ணயிக்கும் கோஹ்லி, தாகூர் துரிதமாக பந்தை எடுத்திருந்தால், இங்கிலாந்து அடுத்த ரன்னை எடுக்காமல் தடுத்திருக்க முடியும் என்ற நினைத்தார். அப்போது, ஜோஸ் பட்லர் அல்லது ஜானி பேர்ஸ்டோ என இருவரில் யாராவது ஒருவர் அவுட் ஆகியிருக்கலாம்.  

Also Raed | ICC Rating: Narendra Modi Stadium ஆடுகளம் சராசரியா? மிகவும் ஏற்றதா?

முன்னதாக, கோலி இருபது ஓவர் போட்டிகளில் தனது 27 வது அரைசதத்தை எடுத்து, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 46 பந்துகளில் கோலி எடுத்த 77 ரன்கள், இந்தியாவை நல்ல நிலைக்கு கொண்டு சென்றது.  

இது கோலியின் தொடர்ச்சியான இரண்டாவது ஐம்பது ரன்கள் ஆகும். அதோடு, அவர் இந்த இரண்டு போட்டிகளிலும் ஆட்டமிழக்காமல் இருந்தார். அணிக்கு மிகவும் தேவைப்படும் சமயத்தில் கோலியின் இந்த ரன் வேட்டை முக்கியமானதாகும்.

Also Read | போதை ஏறினா ஏன் இங்கிலீஷ்ல பேசனும்? இதோ அறிவியல் காரணம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News