Ind vs NZ: இன்று நடைபெறும் 2வது ஒருநாள் போட்டி! இந்திய அணியில் என்ன என்ன மாற்றம்?

india vs new zealand: நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.  

Written by - RK Spark | Last Updated : Jan 21, 2023, 08:11 AM IST
  • இன்று நடைபெறுகிறது 2வது ஒருநாள் போட்டி.
  • தொடரை 1-0 என்று முன்னிலையில் இந்தியா.
  • தொடரை வெல்ல இந்திய அணி தீவிரம்.
Ind vs NZ: இன்று நடைபெறும் 2வது ஒருநாள் போட்டி! இந்திய அணியில் என்ன என்ன மாற்றம்? title=

india vs new zealand: நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய கிரிக்கெட் அணி புதன்கிழமை தொடக்க ஆட்டத்தில் 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் இரட்டை சதம் அடித்தார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இரட்டை சதம் அடித்த இளம் வீரர் என்ற பெருமையையும் கில் பெற்றார். இந்த ஆட்டத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்தை 337 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார். நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் 78 பந்துகளில் 140 ரன்கள் எடுத்தார். 

மேலும் படிக்க | ஓய்வுக்குப் பிறகும் தோனி ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராக முடியாது..! காரணம் இதுதான்!

 

ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி இந்த தொடரில் வெற்றி பெற முழு வேகத்துடன் செயல்பட்டு வருகிறது.  இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ராய்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.  தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இந்தூரில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது. ஒருநாள் போட்டிகள் முடிந்ததும் இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கின்றன.  கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் இடம் பெறாததால், இன்று நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் பிளேயிங் லெவன் அணியில் இடம்பிடிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

வானிலை அறிக்கை

ராய்ப்பூர் வானிலை இன்று பெரும்பாலும் வெயிலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மழை பெய்ய வாய்ப்பில்லை. இன்று காற்றின் வேகம் மணிக்கு 9 கிமீ வேகத்தில் இருக்கும் என்றும், வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் முதல் 14 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஈரப்பதம் சுமார் 35 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பிட்ச் ரிப்போர்ட் 

சுவாரஸ்யமாக, ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச ஸ்டேடியம் அதன் முதல் சர்வதேச போட்டியை நடத்தவுள்ளது. இந்த மைதானத்தில் ஏற்கனவே பல உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் ஆடுகளம் பேட்டர்களுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | சமயம் பார்த்து ரோஹித் சர்மாவை கலாய்த்த இஷான் கிஷன்! வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News