IND vs SA: நாளை 2வது டி20 போட்டி; முதல் வெற்றியை பதிவு செய்வது யார்?

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா மோதும் டி-20 தொடரை யார் கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 17, 2019, 09:22 AM IST
IND vs SA: நாளை 2வது டி20 போட்டி; முதல் வெற்றியை பதிவு செய்வது யார்? title=

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரின், இரண்டாவது போட்டி நாளை மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் ஐ.எஸ் பிந்த்ரா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்கும்.

ஏற்கனவே கடந்த 15 ஆம் தேதி நடைபெற்ற முதல் டி-20 போட்டி, மழையின் காரணமாக டாஸ் போடாமல் ஆட்டம் கைவிடப்பட்டது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு ஆட்டம் நடைபெறாததால், அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெல்லும் அணியே தொடரை கைப்பற்றும். தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா மோதும் டி-20 தொடரை யார் கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

முன்னதாக விராட் கோலி தலைமையிலான அணி கடந்த மாதம் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச டி20 தொடரில் மேற்கிந்திய தீவுகளை தும்சம் செய்தனர். மென் இன் ப்ளூ அணியின் வெற்றி பயணம் எதிர்வரும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Trending News