IPL 2019: நடுவர்களுடன் வாக்குவாதம்! டோனிக்கு அபராதம்!

நேற்றைய ஆட்டத்தில் விதியை மீறி மைதானத்திற்குள் வந்து நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Last Updated : Apr 12, 2019, 10:43 AM IST
IPL 2019: நடுவர்களுடன் வாக்குவாதம்! டோனிக்கு அபராதம்! title=

நேற்றைய ஆட்டத்தில் விதியை மீறி மைதானத்திற்குள் வந்து நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

IPL 2019 தொடரின் 25-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. ஜெய்பூர் சவாய் மன்சிங் மைதானத்தில் நடைப்பெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடிது. சென்னை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக போட்டியின் கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் அந்த ஓவரை வீசினார். அவர் வீசிய பந்து முதலில் நோ பாலாக அறிவிக்கப்பட்டு பின்னர், இல்லை என அறிவிக்கப்பட்டது. இதை வெளியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த டோனி மைதானத்துக்குள் புகுந்து அந்த பந்தை நோ-பாலாக அறிவிக்கும்படி நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தார். ஆனால் அவரது கோரிக்கையை நடுவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். பின்னர், டோனியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக டோனிக்கு, போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

Trending News