IPL 2019: டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு

இன்று நடைபெற உள்ள எட்டாவது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 29, 2019, 07:39 PM IST
IPL 2019: டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு title=

19:41 29-03-2019
இன்று நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்றது. அதனையடுத்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இன்னும் சற்று நேரத்தில் களம் இறங்க உள்ளனர்.

 

 


ஐபிஎல் தொடரின் 12வது சீசன் கடந்த 23 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரின் 7-வது லீக் ஆட்டம் நேற்று முடிந்தது. இன்று நடைபெற உள்ள எட்டாவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

இன்று நடைபெற உள்ள எட்டாவது டி-20 லீக் ஆட்டம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு ஆரம்பமாகும். ஹைதராபாத் - ராஜஸ்தான் இரு அணிகளும் தனது முதல் டி-20 லீக்கில் போட்டியில் வெற்றியை இழந்துள்ளன. இதனால் இந்த இரு அணிகளும் தங்கள் முதல் வெற்றியை பதிவு செய்ய உள்ளனர். 

ராஜஸ்தான் ராயல்ஸ் தனது முதல் போட்டியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் 25 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த ஆட்டத்தில் மன்கட் அவுட் முறையில் அஸ்வின், ஜாஸ் பட்லரை அவுட் செய்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல சன்ரைஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தனது முதல் போட்டியை இழந்தது. ஆனால் இன்றைய போட்டி சொந்த மாநிலத்தில் நடைபெற உள்ளதால் ஹைதராபாத் அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும். இது உள்நாட்டு ரசிகர்களின் ஆதரவு அவர்களுக்கு இருக்கும்.

இரண்டு அணிகளும் முதல் வெற்றியை பதிவு செய்ய இருப்பதால், இன்றைய ஆட்டத்தில் கடும் போட்டி இருக்கும் நிலையில், ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Trending News