IPL_2018: KXIP அணியின் பயிற்சியாளராக இணைந்த முன்னாள் வீரர்!

வரவிருக்கும் IPL 2018 தொடரில், பஞ்சாப் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக வெங்கடேஷ் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Last Updated : Mar 4, 2018, 06:04 PM IST
IPL_2018: KXIP அணியின் பயிற்சியாளராக இணைந்த முன்னாள் வீரர்! title=

வரவிருக்கும் IPL 2018 தொடரில், பஞ்சாப் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக வெங்கடேஷ் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

IPL தொடரின் 11-வது சீசன் வரும் ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது. இதற்காக அறிவிக்கப்பட்ட அணிகள் அனைத்தும் ஆயுத்தமாகி வருகின்றன. கடந்த சில தினங்களாக அணிகள் அனைத்தும் தங்கள் அணி பொருப்பு வீரர்களின் பட்டியலை அறிவித்து வருகின்றன.

அந்த வகையில் இன்று பஞ்சாப் அணி, தங்கள் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக வேகபந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்திய அணியில் முன்னாள் வேக பந்து வீச்சாளரான இவர் BCCI இளையோர் அணி தேர்வுகுழுவின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே வேலையில் கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் தலைவராக தமிழக வீரர் அஸ்வின் மற்றும் ஆலோசகராக அதிரடி நாயகன் சேவாக் தேர்ந்தெடுக்கப் பட்டதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இன்று கொல்கத்தா அணியின் தலைவராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending News