IPL 2019: டாஸ் வென்ற பஞ்சாப், முதலில் பந்துவீச்சு தேர்வு!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் IPL லீக் 6-வது போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப், முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது!

Last Updated : Mar 27, 2019, 08:13 PM IST
IPL 2019: டாஸ் வென்ற பஞ்சாப், முதலில் பந்துவீச்சு தேர்வு! title=

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் IPL லீக் 6-வது போட்டியில் டாஸ் வென்றுள்ள பஞ்சாப், முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது!

IPL 2019 தொடரின் 6-வது லீக் ஆட்டம் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கிங்ஸ் ரவிசந்திர அஸ்வின் தலைமையிலான லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. 

இன்றைய போட்டியை பொறுத்தவரையில் பஞ்சாப் அணி., மில்லர், வையில்ஜோன், வருண் சக்கிரவர்த்தி, ஆன்டிரிவ் டை அணியில் இடம்பெற்றுள்ளனர். பூரன், சாம் கர்ரண், அங்கித் ராஜ்பூட் மற்றும் முஜீப் உர் ரஹுமான் அணியில் இடம்பெறவில்லை. கொல்கத்தா அணியில் மாற்றம் இல்லை.

---இன்றைய போட்டியில் எதிர்பார்ப்புகள்---

  • பஞ்சாப் அணி வீரர் கிறிஸ் கெயில் நான்கு 6-களை அடித்தால் IPL வரலாற்றில் 300 6-கள் அடித்த முதல் வீரர் என்னும் பெருமையினை பெறுவார். முன்னதாக கடந்த 2012-ஆம் ஆண்டு இவர் 100 6-கள் அடித்த முதல் வீரர், 2015-ஆம் ஆண்டு 200 6-கள் அடித்த முதல் வீரர் என்னும் பெருமையினை கெயில் பெற்றது குறிப்பிடத்தக்கது.
  • 60 இன்னிங்ஸ் விளையாடியுள்ள மயங்க் அகர்வால் இதுவைர 956 ரன்கள் குவித்துள்ளார். இன்றைய போட்டியில் 44 ரன்கள் அடித்தால் IPL வரலாற்றில் தனது 1000-வது ரன்னை எட்டுவார். இதன் மூலம் அதிக போட்டிகள் விளையாடி 1000 ரன்கள் குவித்த இரண்டாவது வீரர் என்னும் பெருமையினை பெறுவார். இவருக்கு முன்னதாக இர்பான் பதான் 66 இன்னிங்ஸில் 1000 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.
  • சுனில் நரேன்; இன்றைய போட்டியில் ஒரு விக்கெட் குவித்தால் போதும்., ஈடன் காரட்ன் மைதானத்தில் நடைப்பெற்ற IPL போட்டிகளில் 50 விக்கெட் குவித்த வீரர் என்னும் பெருமையினை பெறுவார். இவருக்கு முன்னதாக வான்கேட் களத்தில் இலங்கை வீரர் மலிங்கா 58 விக்கெட் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News