காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் சுஷில் குமார் தங்கம் வென்றார்!

நேற்று தொடங்கி நடைப்பெற்று வரும் இப்போட்டியில், இந்திய அணி சார்பாக மொத்தம் 60 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.!

Last Updated : Dec 17, 2017, 07:56 PM IST
காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் சுஷில் குமார் தங்கம் வென்றார்! title=

ஜொகனஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் சுஷில்குமார், தங்கப்பதக்கம் வென்றார்!

நேற்று தொடங்கி நடைப்பெற்று வரும் இப்போட்டியில், இந்திய அணி சார்பாக மொத்தம் 60 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

இன்று நடைபெற்ற 74 கிலோ ஃபிரீஸ்டைல் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சுஷில்குமார், தென்னாப்ரிக்க வீரர் ஜொகனஸ் பெட்டுரசை 8-0 என்ற புள்ளிக்கணக்கில் வென்றார். இந்த வெற்றியின் மூலம் காமன்வெல்த் போட்டிகளில் தனது ஐந்தாவது தங்கப்பதக்கத்தினை அவர் பெற்றுள்ளார்.

நேற்றைய போட்டியில் இந்திய அணி சார்பில், ராஜேந்தர் குமார் (55 கிலோ பிரிவு), மணிஷ் (60 கிலோ பிரிவு), விகாஸ் (63 கிலோ பிரிவு), அனில் குமார் (67 கிலோ பிரிவு), ஆதித்யா குண்டு (72 கிலோ பிரிவு), குர்பிரீத் (77 கிலோ பிரிவு), ஹர்பிரீத் (82 கிலோ பிரிவு), சுனில் (87 கிலோ பிரிவு), ஹர்தீப் (97 கிலோ பிரிவு), நவீன் (130 கிலோ பிரிவு) ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது!

Trending News