Thailand cave rescue: மீட்கும் பணியில் ஈடுபட்ட முன்னாள் கடற்படை வீரர் பலி!

தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள 12 கால்பந்து சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை காப்பாற்ற முயற்சித்த முன்னாள் கடற்படை முக்குளிப்பவர் உயிர் இழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Last Updated : Jul 6, 2018, 12:56 PM IST
Thailand cave rescue: மீட்கும் பணியில் ஈடுபட்ட முன்னாள் கடற்படை வீரர் பலி! title=

தாய்லாந்து குகையில் சிக்கியுள்ள 12 கால்பந்து சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை காப்பாற்ற முயற்சித்த முன்னாள் கடற்படை முக்குளிப்பவர் உயிர் இழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தாய்லாந்தில் 12 பள்ளி மாணவர்களும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளரும் மாயமாகினர். மாயமாகி 9 நாட்கள் கழித்து சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையில் நடத்தப்பட்ட தேடுதலில் அவர்கள் அனைவரும் உயிருடன் இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து தகவல் தெரிய வந்ததும் சிறுவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படையினர், முன்னாள் கடற்படை முக்குளிப்பவர்கள், சர்வதேச நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். 

இந்நிலையில் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த முன்னாள் கடற்படை முக்குளிப்பவர் குகையில் போதிய காற்று இல்லாததால் மூச்சு திணறி இறந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News