வாமிகா விவகாரம்: விராட் கோலிக்கு நெட்டிசன்கள் பதிலடி!

விராட் கோலியின் மகள் வாமிகாவின் புகைப்படம் இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டியின் போது வெளியானது.   

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 25, 2022, 12:56 PM IST
  • விராட் மற்றும் அனுஷ்கா தம்பதிகளுக்கு 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று, வாமிகா என்ற பெண் குழந்தையும் பிறந்தது.
  • நாங்கள் வாமிகாவின் முகத்தை வெளியிட மாட்டோம் என்று விராட் மற்றும் அனுஷ்கா கூறியிருந்தனர்.
வாமிகா விவகாரம்: விராட் கோலிக்கு நெட்டிசன்கள் பதிலடி!  title=

தனது மகள் வாமிகாவின் புகைப்படம் இணையத்தில் வெளியானதற்கு விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதி தங்களது வாதங்களை பதிவிட்டிருந்தனர்.  இதற்கு ஒரு புறம் ஆதரவும், மறுபுறம் ட்ரோல்களும் வெளிவந்துள்ளன.  விராட் (Virat Kohli) மற்றும் அனுஷ்கா தம்பதிகளுக்கு 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று கடந்த ஆண்டு வாமிகா என்ற பெண் குழந்தையும் பிறந்தது.  குழந்தை பிறந்த முதலே அதன் முகத்தை வெளியிடாமல் விராட் தம்பதிகள் இருந்து வந்தனர். 

ALSO READ | வைரலான வாமிகாவின் புகைப்படம் - விராட் கோலி வேதனை!

வாமிகாவிற்கு விவரம் தெரிந்த பின்னர் தன்னுடைய முகம் பொதுவெளியில் வரலாமா வேண்டாமா என்பதை அவள் முடிவு செய்யட்டும், அதுவரை நாங்கள் வாமிகாவின் முகத்தை வெளியிட மாட்டோம் என்று கூறியிருந்தனர்.  அதன்படி பொது வெளியில் எங்கு சென்றாலும் முடிந்த வரை வாமிகாவின் முகத்தை மறைத்தபடி இருந்தனர்.  வாமிகாவின் முகத்தை பார்க்கவேண்டும் என்று ரசிகர்களுக்கு ஒருபுறம் ஏக்கம் இருந்தாலும் அவர்களது தனிப்பட்ட விஷயம் என்றும் ஏற்றுக்கொண்டனர். 

இந்நிலையில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டியில் விராட் கோலி (virat kohli)அரைசதம் அடித்தார். அதற்கு பால்கனியில் இருந்து அனுஷ்கா ஷர்மா மகள் வாமிகாவுடன் விராட் கோலிக்கு கையசைத்தார், அதற்கு விரட்டும் தாலாட்டு பாடுவது போல தனது பேட்டின் மூலம் செய்கை செய்தார்.  இது அங்கிருந்த கேமராவில் பதிவாகி வாமிகாவின் முகம் இணையத்தில் வைரல் ஆனது.  இன்னிலையில் நேற்று விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இணைந்து புகைபடம் வெளியானதற்கு வருத்தம் தெரிவித்தனர்.  எங்களுக்கு தெரியாமல் இந்த புகைப்படம் வெளிவந்துள்ளது, யாரும் இந்த புகைப்படத்தை பகிர வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தனர்.  

விராட் கோலியின் ரசிகர்கள் இதற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர், இருப்பினும் இதற்கு எதிர்ப்பும் கிளம்பியது. மைதானத்தில் குழந்தையுடன் வந்தால் முகம் வெளியில் தெரியுமே என்று அனுஷ்கா சர்மாவுக்கு நன்றாக தெரியும், இருப்பினும் பால்கனியில் இருந்து கை அசைக்கிறார்.  பின்பு எங்கள் அனுமதியின்றி வெளிவந்துள்ளது என்றும் தெரிவிக்கின்றனர், இது எந்த விதத்தில் நியாயம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.  இந்நிலையில் தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் விராட் மற்றும் அனுஷ்கா குழம்பி போய்யுள்ளனர்.

 

 

ALSO READ | விராட் குடும்பத்தின் தனியுரிமையை மதிக்க வேண்டாமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News