போலீஸ் கஸ்டடியில் இருந்த குற்றவாளி தப்பி ஓட்டம் விடிய விடிய போலீஸ் தேடுதல் வேட்டை

Tamil Nadu Crime News: கரூர் குளித்தலையில் போலீஸ் கவனக்குறைவால் கஸ்டடியில் இருந்த குற்றவாளி, தப்பி ஓட்டம் விடிய விடிய போலீஸ் தேடுதல் வேட்டை இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 21, 2022, 05:06 PM IST
  • வாலிபர் அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார்.
  • அவனை சுற்றி வளைத்துபிடித்து சரிமாரியாக பொதுமக்கள் அடித்துள்ளனர்.
  • எங்காவது பதுங்கி இருக்கிறாரா? என போலீசார் தேடல்
போலீஸ் கஸ்டடியில் இருந்த குற்றவாளி தப்பி ஓட்டம் விடிய விடிய போலீஸ் தேடுதல் வேட்டை title=

Tamil Nadu Crime News: கரூர் மாவட்டம் குளித்தலை நகர் பகுதி சுங்க கேட் அருகே உள்ள தெருவில் வசிக்கும் பெண் ஒருவர் தனது வீட்டு அருகாமையில் உள்ள வாய்க்கால் படித்துறையில், நேற்று இரவு சுமார் 7 மணியளவில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த வாய்க்காலில் நீந்தி வந்த ஒரு வாலிபர் அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். இதனால் அந்த பெண் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வரவே அந்த நபர் தண்ணீரில் குதித்து தப்ப முயன்றுள்ளார்.

இந்த சம்பவத்தை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் தண்ணீரில் குதித்து நீந்தி தப்பிக்க முயற்ற அந்த வாலிபரை தேடியுள்ளனர். அப்பொழுது அந்த வாலிபர் நீந்தி கரையேற முயன்ற போது, அங்கு இருந்தவர்கள் அவனை சுற்றி வளைத்து பிடித்து சரிமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க: திருநங்கையிடம் பாலியல் சீண்டல் - பாஜக மாவட்ட தலைவர் மீது புகார்

இந்த சம்பவத்தை அறிந்த போக்குவரத்து போலீசார் சுதாரித்துக் கொண்டு அந்த நபரை பொதுமக்களிடம் இருந்து மீட்டு காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தில் பொதுமக்களிடமிருந்து அந்த நபரை காப்பாற்றிய போது, போக்குவரத்து போலீசார் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. ஒரு வழியாக அந்த நபரை மீட்டு போலீசார் குளித்தலை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தியதில், அந்த நபர் நாமக்கல் மாவட்டம், கோயில் பாளையம், பூசாரி கோவில் தெருவை சேர்ந்த கருப்பையா மகன் சிவக்குமார் வயது 36 என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அதை அடுத்து போலிசாரின் கஸ்டடியில் இருந்தா குற்றவாளி, போலிசாரின் சற்று கவனக்குறைவு இருந்ததால், அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து போலீசார் தப்பிச்சென்ற நபர் எங்காவது பதுங்கி இருக்கிறாரா என பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மேலும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க: மின்கம்பத்தில் கட்டிவைத்து சரமாரியாக தாக்கிய கணவன்... துடிதுடித்த மனைவி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News