விவசாயிகளின் கடன் தள்ளுபடி- ஐகோர்ட் அதிரடி!

Last Updated : Apr 4, 2017, 12:15 PM IST
விவசாயிகளின் கடன் தள்ளுபடி- ஐகோர்ட் அதிரடி! title=

கூட்டுறவு வங்கி மூலம் பெறப்பட்ட அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு 5 ஏக்கர் வரை வைத்திருப்போரின் விவசாய கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. ஆனால் 5 ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்திருந்தாலும் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 

வழக்கை விசாரித்த கோர்ட், சிறு,குறு என பாகுபாடு காட்டாமல், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன், நகைக்கடன் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என நீதிபதிகள் முரளிதரன், நாகமுத்து ஆகியோர் உத்தரவிட்டனர்.

Trending News