டிச.,14 பொது விடுமுறை இல்லை, - மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு!

டிசம்பர் 14-ஆம் தேதி பொதுவிடுமுறை இல்லை என்பதால் அனைத்து அலுவலர்களும், அலுவலகத்தில் இருந்து வேட்புமனுகளை பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்துயள்ளது.

Last Updated : Dec 12, 2019, 07:55 PM IST
டிச.,14 பொது விடுமுறை இல்லை, - மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு! title=

டிசம்பர் 14-ஆம் தேதி பொதுவிடுமுறை இல்லை என்பதால் அனைத்து அலுவலர்களும், அலுவலகத்தில் இருந்து வேட்புமனுகளை பெற வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்துயள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனுக்களை பெற டிசம்பர் 14-ஆம் தேதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலகத்தில் இருக்க வேண்டும் எனவும், 14-ஆம் தேதி சனிக்கிழமை பொதுவிடுமுறை இல்லை என்பதால் அனைத்து அலுவலர்களும் அலுவலகத்தில் இருக்க வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

---- தமிழக உள்ளாட்சி தேர்தல் ----

முன்னதாக தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து அதற்கான பணிகளை தொடங்கியது. இந்த அறிவிப்பை எதிர்த்து திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தொகுதி வரையறையை முடிக்காமல் தேர்தலை நடத்தக்கூடாது என திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் நேற்று தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் மட்டும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தலாம் என தீர்ப்பளித்தது.

மேலும் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் 4 மாதத்தில் தொகுதி மறுவரையறை பணிகளை முடித்து தேர்தலை நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, ஆணைய செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் ஊரக உள்ளாட்சி வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்றனர். தேர்தல் தேதி அட்டவணையை இறுதி செய்வது குறித்து இந்த ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து கடந்த டிசம்பர் 7 அன்று மாலை மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர் சந்திப்பின் போது அவர் தெரிவிக்கையில்.,  தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிறபகுதிகளில் டிச 27, 30 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்.

உள்ளாட்சி தேர்தலுக்கு 9.12.2019 அன்று முதல் 16.12.2019 வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும். 17.12.2019 அன்று வேட்பு மனு மீது ஆய்வு நடைபெறும். வேட்புமனுக்களை திரும்ப பெற 19.12.2019 அன்று கடைசி நாளாகும். இருகட்டங்களாக நடைபெறும் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் 2.1.2020 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்  என்றும் தெரிவித்தார். 

மேலும், மாவட்ட, ஒன்றிய குழு தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் 11-01-2020-ல் நடைபெறும். ஊராட்சி மன்ற துணைத் தலைவர்களுக்கு மறைமுக தேர்தல் 11-01-2020-ல் நடைபெறும்.  கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

---ஊரக உள்ளாட்சித் தேர்தல் முக்கிய தேதிகள்---

  • வேட்பு மனு தாக்கல் - 09.12.2019
  • வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் - 16.12.2019
  • வேட்பு மனுக்கள் பரிசீலனை - 17.12.2019
  • வேட்பு மனுக்கள் வாபஸ் கடைசி நாள் - 19.12.2019
  • முதல்கட்ட தேர்தல் - 27.12.2019
  • இரண்டாம் கட்ட தேர்தல் - 30.12.2019
  • வாக்கு எண்ணிக்கை - 02.01.2020

Trending News