பிரியாணி மேன் மீண்டும் கைது - கிறிஸ்துவ மதத்தை இழிவுபடுத்தியதாக புகார்

Biryani Man Abishek Rabi : பிரியாணி மேன் அபிஷேக் ரபி கிறிஸ்துவ மதத்தை இழிவுபடுத்திய புகாரில் சென்னை சைபர் கிரைம் போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 7, 2024, 10:15 PM IST
  • பிரியாணி மேன் அபிஷேக் ரபி கைது
  • கிறிஸ்துவ மதத்தை இழிவுபடுத்தியதாக புகார்
  • சென்னை சைபர் கிரைம் போலீஸ் நடவடிக்கை
பிரியாணி மேன் மீண்டும் கைது  - கிறிஸ்துவ மதத்தை இழிவுபடுத்தியதாக புகார் title=

Biryani Man Arrest : யூடியூபில் பிரபலமானவராக இருந்த பிரியாணிமேன் அபிஷேக் ரபி ஏற்கனவே அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில் இப்போது மீண்டும் கிறிஸ்துவ மதத்தை இழிவுபடுத்திய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சைபர் கிரைம் போலீஸார் அபிஷேக் ரபியை கைது செய்துள்ளனர். அவர் அண்மைக்காலமாக யூடியூபில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி தொடர்ச்சியாக வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அதில் செம்மொழி பூங்கா குறித்து அறுவருக்கத்தக்க வகையில் பேசி காணொளி போட்டிருந்தார். அத்துடன் தமிழ்நாடு அரசையும் விமர்சித்து இந்த வீடியோவில் பேசியிருந்தார். இதனால் அபிஷேக் ரபி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுகவினர் வலியுறுத்தினர். 

மேலும் படிக்க | நெல்லையில் அதிர்ச்சி! கடைக்குள் புகுந்து இளைஞர் படுகொலை! முழு விவரம்!

இந்த சூழலில் செம்மொழி பூங்கா குறித்து அவதூறாக பேசிய பிரியாணி மேன் எனப்படும் அபிஷேக் ரபி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேனாம்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்தார். அதில் செம்மொழிப் பூங்காவில் தினந்தோறும் நடைப்பயிற்சி செய்வதாகவும், அந்த பூங்கா குறித்து பிரியாணிமேன் அபிஷேக் ரபி தரம்தாழ்ந்து பேசியிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். பெண்களை இழிவுபடுத்தும் வகையில் அந்த வீடியோவில் பேசிய அபிஷேக் ரபியை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகாரில் அந்த பெண் கூறியிருந்தார். 

இதனைத் தொடர்ந்து தெற்கு மண்டல கணினிசார் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு, செம்மொழி பூங்காவின் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் ஆபாசமான உடல் அசைவு சைகைளைக்காட்டி, கொச்சை வார்தைகளுடன் youtubeல் வீடியோ பதிவேற்றம் செய்த அபிஷேக் ரபியை 29 ஆம் தேதி கைது செய்தனர். அன்றே நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய காவல்துறையினர் பின்னர் சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இப்போது அவர் மீது மீண்டும் ஒரு வழக்கு பாய்ந்துள்ளது.

இன்னொரு வீடியோவில் கிறிஸ்துவ மதத்தை இழிவுபடுத்தும் வகையில் அபிஷேக் ரபி பேசியதாக சைபர் கிரைம் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் புழல் சிறையில் வைத்தே சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனால் பிரியாணிமேன் அபிஷேக் ரபிக்கு சிக்கல் அதிகரித்துள்ளது. அபிஷேக் ரபி, பிரபல யூடியூபர் இர்பானுடன் கடும் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வந்தார். இந்த விவகாரம் பெரும் பிரச்சனையாக யூடியூப் வட்டாரத்தில் வெடித்தது. இதனைத் தொடர்ந்தே பிரியாணி மேன் அவதுறாக பேசிய வீடியோ எல்லாம் வைரலாகி, இப்போது சிறையில் இருக்கிறார். 

மேலும் படிக்க | ஆம்ஸ்ட்ராங் கொலையில் பிரபல ரவுடியின் மகன் அஸ்வத்தாமன் கைது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News