அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவு!

சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதா என்ற சந்தேகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் எஸ் கே பீட்டர் நிறுவனம் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தி இருந்தனர்.  

Written by - RK Spark | Last Updated : Feb 20, 2024, 07:02 AM IST
  • சட்டவிரோத பண பரிமாற்றம்?
  • அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.
  • தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு.
அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவு! title=

பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு எதிரான அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னையில் செயல்பட்டு வரும் பிரபல கட்டுமான நிறுவனமான, ஓஷன் லைஃப் ஸ்பேசஸ் (OCEAN LIFE SPACES) நிறுவனத்தை எஸ்.கே பீட்டர் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் ஒன்றாக இணைந்து தொடங்கினர். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்த நிலையில், நிறுவனத்தில் தனக்கு சேர வேண்டிய பங்கை எஸ்.கே பீட்டர் தர மறுத்ததாகக் கூறி ஸ்ரீராம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் எஸ்.கே.பீட்டர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார்  வழக்கு பதிவு செய்தனர். 

மேலும் படிக்க | TN Budget 2024 Highlights:தமிழகத்தில் வரப்போகும் மாற்றங்கள் என்ன? எந்த திட்டத்திற்கு எவ்வளவு ஒதுக்கீடு?

இதற்கிடையில், இந்த விவகாரத்தில் சுமார் 50 கோடி ரூபாய் வரை பணபரிமாற்றம் நடத்ததாக புகார் எழுந்ததை அடுத்து, சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்துள்ளதா? என அமலாக்கத்துறை அதிகாரிகள், எஸ் கே பீட்டர் நிறுவனம் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தினர். அதன் அடிப்படையில் நிறுவனத்திற்கு எதிராக வழக்குப்பதிவு செய்த அமலாக்கத்துறை, ஆவணங்களுடன் ஆஜராகுமாறு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பீட்டருக்கும் சம்மன் அனுப்பியது. இதனை எதிர்த்து பீட்டர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், இருவருக்கிடையேயான தொழில் பிரச்சனையில் தலையிட்டு அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது தவறு என கூறப்பட்டுள்ளது. 

மேலும், தன் மீதான சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில் சட்ட விரோத பணப்பரிமாற்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்தது செல்லாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த மனு  நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது,  அமலாக்கத் துறை நடவடிக்கை, நிறுவனத்திற்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்றும் ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தியுள்ளதால் அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்த நீதிபதிகள், மனுவுக்கு பதிலளிக்கும்படி, அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 1ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

மேலும் படிக்க | TN Budget 2024: பட்ஜெட்டில் தென்மாவட்ட மக்களுக்கு அடித்த ஜாக்பாட்கள் என்னென்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News