சென்னையில் கல்லூரி மாணவர் மரணம்! விக்டோரியா கல்லூரி ஹாஸ்டலில் தூக்கிட்டு தற்கொலை

College Student Suicide: சென்னை திருவல்லிக்கேணி அரசு விக்டோரியா மாணவர் விடுதியில் இரண்டாம் ஆண்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Edited by - Malathi Tamilselvan | Last Updated : Dec 20, 2022, 01:18 PM IST
சென்னையில் கல்லூரி மாணவர் மரணம்! விக்டோரியா கல்லூரி ஹாஸ்டலில் தூக்கிட்டு தற்கொலை title=

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி அரசு விக்டோரியா மாணவர் விடுதியில் இரண்டாம் ஆண்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை தாம்பரம் அருகே உள்ள சித்தாலப்பாக்கம் அசினா புரத்தை சேர்ந்தவர் செந்தில் இவரது மகன் சதீஷ். இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி அருகில் உள்ள அரசினர் விக்டோரியா மாணவர் தங்கும் விடுதியில் தங்கி  படித்து வருகிறார்

விடுதி அருகே உள்ள பிட்சா கடையில் பகுதி நேரமாக உணவுப்பொருள்களை வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் பணியை சதீஷ் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு பணி முடிந்து அறைக்கு சென்றவர் காலை வரை திறக்கவில்லை.

மேலும் படிக்க | புத்தாண்டின் கிரக பெயர்ச்சிகள்: சனி, சுக்கிரன், சூரியன் வியாழன் கிரகங்களின் சஞ்சாரம்

அவரது அறை எண் 104இல், சதீஷ் தூங்கிக் கொண்டிருக்கிறார் என்று  மாணவர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால், நேற்று மாலை வரை அறையின் கதவு திறக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த மாணவர் விடுதியின் காப்பாளர் தர்மராஜ் என்பவர் காவல் துறைக்கு புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கதவை உடைத்தனர்.

மேலும் படிக்க | தும்மினாலும் விமர்சிக்க தயாராக இருக்கிறார்கள் ஜாக்கிரதை - அமைச்சரை எச்சரித்த முதலமைச்சர் 

விடுதியில் தனது அறையில் இருந்த மின்விசிறியில் சதீஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்போது தெரியவந்துள்ளது. இந்நிலையில் உடனடியாக அவரது உடலை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்

 மாணவர் சதீஷ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரித்து வரும் சென்னை போலீசார், அவர் தற்கொலை தொடர்பாக ஏதேனும் கடிதம் எழுதி வைத்துள்ளாரா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | சொத்து விவரங்களை வெளியிட திமுக தலைவர்கள் தயாரா?... அண்ணாமலை கேள்வி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News