காதலிக்கு செல்போன் வாங்கித் தருவதற்கு மூதாட்டியை கொலை செய்த கல்லூரி மாணவர்..!

கடலூரில் காதலிக்கு செல்போன் வாங்கி கொடுப்பதற்காக மூதாட்டியை துடிதுடிக்கக் கொலை செய்து நகையை திருடியை கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். 

Written by - Gowtham Natarajan | Last Updated : Apr 10, 2022, 12:29 PM IST
  • மூதாட்டியை கொலை செய்த கல்லூரி மாணவர்
  • தங்க நகையை திருடி அடமானம் வைத்த சம்பவம்
  • காதலிக்கு செல்போன் வாங்க கொலைகாரனான மாணவர் ?
காதலிக்கு செல்போன் வாங்கித் தருவதற்கு மூதாட்டியை கொலை செய்த கல்லூரி மாணவர்..! title=

கடலூர் மாவட்டம் வேப்பூர் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் மூதாட்டி பட்டதாள். கணவரை இழந்தவர், மகளுக்கு திருமணம் செய்து கொடுத்து தனியாக வாழ்ந்து வந்திருக்கிறார். சம்பவத்தன்று பட்டதாளை அவரது மகள் பார்வதி பார்க்க சென்றிருக்கிறார். வீட்டின் கதவுகள் திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த பார்வதி குலை நடுங்கி போயிருக்கிறார். பேச்சு மூச்சில்லாமல் பட்டதாள் சுருண்டு கிடந்திருக்கிறார். மயங்கி விழுந்து விட்டாரா என தண்ணீரை முகத்தில் அடிக்க, கொஞ்சம் கூட அசைவில்லை. நாடி பிடித்து பார்க்க பேரதிர்ச்சி..! பட்டதாள் இறந்துபோயிருக்கிறார். அதிர்ச்சியடைந்த மகள், அக்கம் பக்கத்தினருக்கும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்திருக்கிறார். வயது முதிர்ச்சி இயற்கை மரணம் என்றெல்லாம் நினைத்து அழுது கொண்டிருக்கும் போது பார்வதி கண்ணில் தென்பட்டது எல்லாத்தையும் மாற்றிப் போட்டது.

காதலிக்கு செல்போன் வாங்கி

பட்டதாள் அணிந்திருந்த தங்க நகைகள் காணாமல் போயிருந்தது. வீடு முழுக்க தேடியும் கிடைக்கவில்லை. சந்தேகமடைந்த பார்வதி கையோடு காவல் நிலையத்திற்கு சென்றிருக்கிறார். தாயின் இறப்பில் மர்மம் இருப்பதாகவும், அவர் அணிந்திருந்த நகைகளை காணவில்லை என்றும் புகாரளித்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணையைத் தொடங்கினர். வீட்டில் கிடைத்த தடையங்களும் நகர்வுகள் கிட்டத்தட்ட அது கொலை என்பதை உறுதிப்படுத்தியது. பட்டதாளின் குடும்பத்தினர் உடைந்து போனார்கள். பாவம் யாருக்கும் கெடுதல் நினைக்காத ஒரு உயிர்.

காதலிக்கு செல்போன் வாங்கி

அவருக்கு இப்படி ஒரு இறப்பா என்று வேதனை பட்டனர். அதே நேரம் பட்டதாளை கொலை செய்தது யார் ? என்ற கேள்விக்கு போலீசார் தீவிரமாக விடைத்தேடி கொண்டிருந்த நேரம் சில துப்பு கிடைத்தது. சம்பவத்தன்று பட்டதாளின் வீட்டிற்கு வந்து சென்றவர் குறித்த தகவல்கள் கசிந்தது. அதே பகுதியில் வசித்துவரும் கல்லூரி மாணவர் சூர்யா என்பவரை பிடித்து விசாரிக்க கிட்டத்தட்ட எல்லாம் உறுதியாகிப் போனது.

காதலிக்கு செல்போன் வாங்கி

மேலும் படிக்க | 27 ஆண்டுகளுக்கும் மேலாக சாராய சாம்ராஜ்யத்தை நடத்தி வரும் மகேஸ்வரி..!

ஆம், சூர்யாதான் பட்டதாளை கழுத்து நெரித்து கொலை செய்திருக்கிறார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், காதலிக்கு செல்போன் வாங்கி கொடுப்பதற்கு பணம் தேவைப்பட்டதாகவும், அதனால் மூதாட்டியை கொன்று அவரிடம் இருந்த நகைகளை திருடியதாகவும் போலீசில் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து சூர்யாவை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் படிக்க | மாணவர்களை மயக்கி ஆசிரியை உல்லாசம் - கசிந்த வீடியோ..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News