கார்த்திக் கோபிநாத்தை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி மறுப்பு

Karthick Gopinath: யூடியூபர் கார்த்திக் கோபிநாத்தை போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. 

Written by - Chithira Rekha | Last Updated : Jun 2, 2022, 06:29 PM IST
  • கார்த்திக் கோபிநாத்தை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி மறுப்பு
  • மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்ட கார்த்திக் கோபிநாத்
  • கார்த்திக் கோபிநாத்தின் ஜாமீன் மனு நேற்று தள்ளுபடி
கார்த்திக் கோபிநாத்தை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி மறுப்பு title=

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழாவுக்கு பிரசித்தி பெற்ற இக்கோவிலை கடந்த ஆண்டு மர்ம நபர்கள் இடித்து தள்ளியதாக புகார் எழுந்தது. வேறு மதத்தை சேர்ந்தவர்கள் கோயிலில் புகுந்து சிலைகளை உடைத்ததாக இந்து மதத்தினர் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் மற்ற மதத்தினருக்கு தொடர்பில்லை என கண்டுபிடித்ததுடன், சிலை உடைப்பில் ஈடுபட்ட ஒருவரையும் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கோவிலை புனரமைக்கும் பணியில் கார்த்திக் கோபிநாத் என்பவர் இறங்கினார். இளைய பாரதம் என்ற யூ டியூப் சேனல் நடத்தி வந்த அவர், தீவிர பா.ஜ.க ஆதரவாளராகவும், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு நெருக்கமாகவும் காட்டிக் கொண்டார். அமித்ஷா தமிழகம் வருகையின்போது ஏர்போர்டில் சென்று வரவேற்றவர்களில் ஒருவராகவும் இருந்தார். இந்நிலையில், கோவில் புனரமைப்பு பணிக்காக கார்த்திக் கோபிநாத் வசூல் செய்த பணத்தில் மோசடி நடைபெற்றதாக புகார் எழுந்தது.

கோடி கணக்கில் பணத்தை வசூலித்து, கோவில் புனரமைப்புக்கு செலவு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்து பெரும் சர்ச்சையானது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய ஆவடி மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறை, இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில் 50 லட்சம் ரூபாய் மோசடி செய்த புகாரில் கார்த்திக் கோபிநாத்-ஐ கைது செய்தனர். 

மேலும் படிக்க | கார்த்திக் கோபிநாத் கைது முதல் சுப்ரமணியன் சுவாமி ட்விட்டர் வரை.!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிறுவாச்சூர் கோவில் நிதி மோசடி புகார் தொடர்பாக ஆடியோ ஒன்று வெளியானது. அந்த ஆடியோவில் கார்த்திக் கோபிநாத் என்பவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பெயரையும் பயன்படுத்தியிருந்தார். இது குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, கார்த்திக் கோபிநாத் யார் என்றே தெரியாது எனக் கூறியிருந்தார். 

இந்த நிலையில் கார்த்திக் கோபிநாத் கைதுக்கு கண்டனம் தெரிவித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ட்வீட் செய்திருந்தார். அவருக்குத் தேவையான சட்ட உதவிகள் அனைத்தையும் தமிழக பா.ஜ.க செய்து கொடுக்கும் என்றும் தெரிவித்தார்.  கார்த்திக் கோபிநாத் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நேற்று விசாரித்த பூந்தமல்லி நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது.

கார்த்திக் கோபிநாத்தை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் அனுமதி கோரினர். ஆனால், அவரை போலீஸ் காவலில் விசாரிக்க பூந்தமல்லி நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கார்த்திக் கோபிநாத் மீண்டும் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மேலும் படிக்க | தமிழக ஆளுநர் முதல்வர் சந்திப்பு : காரணம் என்ன?

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

 

Trending News