COVID-19: தமிழகத்தில் இன்று 5,958 பேருக்கு கொரோனா தொற்று; 118 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இன்று 5,958 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. தலைநகரம் சென்னையில் 1,290 பேருக்கு பாதிப்பு.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 26, 2020, 06:35 PM IST
COVID-19: தமிழகத்தில் இன்று 5,958 பேருக்கு கொரோனா தொற்று; 118 பேர் உயிரிழப்பு title=

சென்னை: தமிழகத்தில் இன்று 5,958 பேருக்கு கொரோனா தொற்று (Corona Positive) உறுதி செய்யப்பட்டு உள்ளது. தலைநகரம் சென்னையில் 1,290 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா (Coronavirus) தொற்றால் 118 பேர் உயிரிழந்துள்ளனர். அதேநேரத்தில் இன்று 5,606 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள். இதுவரை மொத்தம் 3,38,060 பேர் குணமடைந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். 

தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் (COVID in Tamil Nadu) பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 3,97,261 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல மாநிலத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 6,839 ஆக உயர்ந்தது.

ALSO READ |  இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி உங்கள் முகமூடியை சுத்தம் செய்யவும்..!

இன்றைய நிலவரம்: 26-08-2020
கொரோனா பாதிப்பு - 5,958
சிகிச்சை பெற்று வருபவர்கள் - 53,362
பரிசோதிக்கப்பட்ட மாதிரிகள் - 75,500
குணமடைந்து வெளியேறியவர்கள் - 5,606 
இறப்பு - 118

ALSO READ | COVID-19 குறித்து பயப்பட வேண்டாம்... மருத்துவ நிபுணர்கள் கூறுவது என்ன?...

No description available.

 

No description available.

 

No description available.

No description available.

Trending News