கோடநாடு விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்திக்கின்றார் MK ஸ்டாலின்!

கோடநாடு கொலை - கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான புகாரில் விசாரணை நடத்தக்கோரி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்திக்கின்றார்!

Last Updated : Jan 14, 2019, 09:06 AM IST
கோடநாடு விவகாரம் தொடர்பாக ஆளுநரை சந்திக்கின்றார் MK ஸ்டாலின்! title=

கோடநாடு கொலை - கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதான புகாரில் விசாரணை நடத்தக்கோரி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை இன்று திமுக தலைவர் முக ஸ்டாலின் சந்திக்கின்றார்!

கோடநாடு கொள்ளை - கொலை சம்பவம் குறித்து தெஹல்ஹா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த ஆவணப்படத்தில் கோடநாடு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள், கொள்ளைக்காக திட்டமிட்டது பற்றி தெரிவிக்கின்றனர். முக்கியமாக, கொடநாடு எஸ்டேட்டில் இருந்து பணம், நகைகள் மற்றும் சில முக்கியமான ஆவணங்களை கொண்டு வந்து கொடுக்குமாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜிடம் கூறியதாக குற்றவாளி சயன் குறிப்பிட்டுள்ளார்.

கோடநாடு சம்பவம் தொடர்பாக 5 பேர் இறந்தது திட்டமிட்ட படுகொலை என்றும், கோடநாடு சம்பவத்திலும், ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னணியிலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், சசிகலாவும் உள்ளனர் என்றும் வீடியோவில் பேசியவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் குரல் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி எதிர்கட்சி தலைவரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்ககவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று மாலை ஆளுநர் மாளிகையில் சந்திப்பு நிகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News