திமுக - காங்கிரஸ் கூட்டணியில் மாற்றம் வராது -திருநாவுக்கரசர்...!

காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடிக்கு நிவாரண பொருட்கள் சேமிக்கப்பட்டு கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது....! 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 25, 2018, 11:12 AM IST
திமுக - காங்கிரஸ் கூட்டணியில் மாற்றம் வராது -திருநாவுக்கரசர்...! title=

காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடிக்கு நிவாரண பொருட்கள் சேமிக்கப்பட்டு கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது....! 

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவால் பேரழிவு ஏற்பட்டது. மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 324 பேர் பலியாகியுள்ளதாகவும், வெள்ளத்தில் சிக்கிய சுமார் 10 லட்சம் பேர் மீட்கப்பட்டு அரசு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருந்தார்.

தற்போது மழை நின்று  விட்டதால் மாநிலம் முழுவதும் மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. கேரள வெள்ள நிவாரணத்திற்கு உலக நாடுகள், இந்தியா முழுவதுமுள்ள மாநிலங்கள் என பல்வேறு தரப்புகளில் இருந்து நிவாரண உதவிகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில்,  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகள் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்...காங்கிரஸ் சார்பில் ரூ.1 கோடிக்கு நிவாரண பொருட்கள் சேமிக்கப்பட்டு கேரளாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், திமுக தலைவர் கருணாநிதி நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டாலும் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் மாற்றம் வராது எனவும் தெரிவித்துள்ளார்...!

 

Trending News