TN Weather: 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 24, 2021, 03:37 PM IST
  • 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு அதிகனமழை.
  • கனமழை காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் சில இடங்களில் மணல் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது.
  • மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
TN Weather: 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் title=

சென்னை: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கு அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, தமிழகத்தின் (Tamil Nadu) நீலகிரி, கோவை, தேனி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த நான்கு மாவட்டங்களைத் தவிர மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான திண்டுக்கல், தென்காசி  ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை (TN Rain) பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், திருநெல்வேலி, தூத்துக்குடி, ஈரோடு, சேலம், மதுரை, விருதுநகர், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

ALSO READ: Donkey Sawari: மழை வேண்டி கழுதை மீது உட்கார்ந்து ஊரைச்சுற்றி வந்த நாட்டாமை 

கனமழை காரணமாக கோவை, நீலகிரி மாவட்டங்களில் சில இடங்களில் மணல் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சென்னையை (Chennai) பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

இன்று (ஜூலை 24) மற்றும் நாளை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், மன்னார் வளைகுடா மற்றும் ஆந்திர கடலோர பகுதிகளிலும் மணிக்கு சுமார் 40-50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தெற்கு வங்கக் கடல் மற்றும் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் வரும் 26 ஆம் தேதி வரை, மணிக்கு சுமார் 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை உள்ளது. இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளில் மீன்ப் பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

ALSO READ:  China: கனமழை, பெரு வெள்ளத்தால் தத்தளிக்கும் மக்கள், பதபதைக்கும் காட்சிகள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News