விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடத்தில் சாதிய ரீதியான அடையாளங்கள் கூடாது -மதுரை ஐகோர்ட்

Madurai High Court: கபடி போட்டி நடத்த சில உத்தரவுகளை பிறபித்து. விதிகளை மீறினால் போட்டியை நிறுத்தலாம் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

Written by - Shiva Murugesan | Last Updated : Sep 8, 2022, 05:26 PM IST
  • சாதியை கட்சிகளின் புகைப்படங்கள், பிளக்ஸ் பேனர்கள் கூடாது.
  • மது அருந்தியிருக்கக் கூடாது. மீறினால் போட்டியை நிறுத்தலாம்.
  • தேவையான வசதிகளை செய்து கொடுத்திருக்க வேண்டும்.
விளையாட்டு போட்டிகள் நடைபெறும் இடத்தில் சாதிய ரீதியான அடையாளங்கள் கூடாது -மதுரை ஐகோர்ட் title=

கபடி போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் உடைகளில் அரசியல் கட்சியின் சின்னங்கள், அரசியல் தலைவர்களின் படங்கள், சாதிய ரீதியான அடையாளங்கள் இருக்கக் கூடாது. அரசியல் மற்றும் சாதிய ரீதியிலான பாடல்கள் ஒளிபரப்பக் கூடாது. போட்டி நடைபெறும் இடத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சாதியை கட்சிகளின் புகைப்படங்கள், பிளக்ஸ் பேனர்கள் இருக்க கூடாது. அதேபோல போட்டியில் பங்கேற்பவர்கள் போதை பொருட்கள் மற்றும் மது அருந்தியிருக்கக் கூடாது. விதிகளை மீறினால் போட்டியை நிறுத்தலாம் என உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

திருநெல்வேலியைச் சேர்ந்த தாசன், "திருநெல்வேலி மாவட்டம் விஜயநாராயணபுரத்தில் மாலை நேர கபடி போட்டி நடத்த அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சக்திகுமார் சுகுமார குருப் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டது பின்வருமாறு:

- கபடி போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் உடைகளில் அரசியல் கட்சியின் சின்னங்கள், அரசியல் தலைவர்களின் படங்கள், சாதிய ரீதியான அடையாளங்கள் இருக்கக் கூடாது.

- மற்றும் சாதிய ரீதியிலான பாடல்கள் ஒளிபரப்பக் கூடாது.

Madurai High Court

- போட்டி நடைபெறும் இடத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் சாதியை கட்சிகளின் புகைப்படங்கள், பிளக்ஸ் பேனர்கள் இருக்க கூடாது.

- கபடி விளையாட்டு நடைபெறும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு மருத்துவர்கள் இருக்க வேண்டும். அங்கு அனைத்து முதலுதவி சிகிச்சைகளுக்கான உபகரணங்கள் இருக்க வேண்டும்.

- விளையாட்டு போட்டி நடைபெறும் இடத்தில் தேவையான வசதிகளை செய்து கொடுத்திருக்க வேண்டும்.

- போட்டியில் பங்கேற்பவர்கள் போதை பொருட்கள் மற்றும் மது அருந்தியிருக்கக் கூடாது.

இந்த நிபந்தனைகளை மீறும் வகையில் போட்டி நடந்தால் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து போட்டியை  நிறுத்தலாம் என கட்டுப்பாடுகள் விதித்து அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் படிக்க: வைரலாகும் திருமணத்தில் வைத்த பேனர்! என்ன எழுதி இருக்காங்கனு பாருங்க!

மேலும் படிக்க: விஜய், அஜித்துக்கே இல்லை..ஆனா உதயநிதிக்கு கிடைத்த பெருமை!

மேலும் படிக்க: துரோகம்.. திமுகவின் பினாமி.. பச்சோந்தியை விட அதிகம் நிறம் மாறுபவர் ஓபிஎஸ் -ஈபிஸ் விமர்சனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News