ஓசூர்: மூன்றரை லட்சம் செலவு செய்து கருத்தரிக்கவில்லை - மருத்துவமனையை முற்றுகையிட்ட தம்பதி

ஓசூரில் கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் கருமுட்டையை விற்றதாக கூறி அவரது குடும்பத்தினர் கருத்தரிப்பு மைய மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 18, 2023, 09:55 AM IST
ஓசூர்: மூன்றரை லட்சம் செலவு செய்து கருத்தரிக்கவில்லை - மருத்துவமனையை முற்றுகையிட்ட தம்பதி title=

ஓசூர் தின்னூர் பகுதியை சேர்ந்தவர் சப்தகிரி, இவரது மனைவி சவிதா. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் ஓசூரில் உள்ள ஒரு தனியார் கருத்தரிப்பு மையத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் குழந்தை கருத்தரிப்புக்காக சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இதற்காக கணவன், மனைவி இருவரும் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளனர். கருத்தரிப்புக்காக மருத்துவமனை நிர்வாகத்தினர் சப்தகரியின் விந்தணு மற்றும் சவிதாவின் கருமுட்டை ஆகியவற்றை பெற்று 13 கருமுட்டைகளை வளர்த்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதில் 3 கருமுட்டைகள் ஆரோக்கியமாக இருப்பதாக கூறி அதனை கடந்த மாதம் 22 ஆம் தேதி சவிதாவின் கருப்பைக்குள் செலுத்தியுள்ளனர். இந்த நிலையில் இன்று சவிதாவின் கருப்பைக்குள் செலுத்தப்பட்ட கருமுட்டைகள் கருத்தரிக்கவில்லை என மருத்துவர்கள் கணவன் மனைவியிடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவன் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் 3 கருமுட்டைகளில் 2 கருமுட்டைகள் மட்டும்தான் கருப்பைக்குள் வைக்கப்பட்டது. மீதமுள்ள ஒரு கருமுட்டையை தற்போது கருப்பைக்குள் வையுங்கள். அதன் மூலம் மீண்டும் கருத்தரிக்கலாம் என கேட்டுள்ளனர். அதற்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் 3 கருமுட்டைகளையும் கருப்பைக்குள் வைத்து கருத்தரிக்க சிகிச்சை அளித்தோம். 

மேலும் படிக்க | கலாஷேத்ரா பாலியல் தொல்லை சம்பவம்! முக்கிய முடிவு செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

3 கரு முட்டைகளும் கருத்தரிக்கவில்லை என கூறியுள்ளனர். அதனை மறுத்த சப்தகிரியின் குடும்பத்தினர் 2 கருமுட்டைகளை மட்டுமே மருத்துவர்கள் கருப்பைக்குள் வைத்துள்ளனர். மீதமிருந்த ஒரு கருமுட்டையை மருத்துவமனை நிர்வாகம் பணத்திற்காக விற்று விட்டதாக கூறி மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் இரு தரப்புக்கும் இடையே கைகலப்பும் ஏற்பட்டது. இதனால் அந்த மருத்துவமனைக்குள் பெரும் பரபரப்பு காணப்பட்டது. தகவல் அறிந்து வந்த ஓசூர் நகர காவல்துறையினர்  இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சப்தகிரி, சவிதா ஆகியோர் போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கருமுட்டை விவகாரம் ஏற்கனவே தமிழகத்தின் பல இடங்களில் பூதாகரமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஓசூரில் தனியார் மருத்துவமனை நிர்வாகம் கருமுட்டையை விற்றது என கணவன் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | அதிமுக நெருப்பு..டச் பண்ணாதீங்க அண்ணாமலை - கடுகடுத்த ஜெயக்குமார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News