வேலைக்கு செல்ல சொன்ன மனைவியை குத்தி கொலை செய்த கணவன்

வேலைக்கு போகச்சொன்ன மனைவியை குத்திக்கொன்ற கனவனின் வெறிச்செலலால் அப்பகுதி மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 21, 2022, 11:14 AM IST
வேலைக்கு செல்ல சொன்ன மனைவியை குத்தி கொலை செய்த கணவன் title=

கோவை செல்வபுரம் பிரியா நகர் பகுதியை சேர்ந்த இராமநாதன் வேலைக்கு செல்லாமல் இருந்துவந்ததாக தெரிகிறது இதனால் அடிக்கடி கனவன் மனைவிக்குள் குடும்பத்தில் பிரச்சனைகள் இருந்ததாக தெரிகிறது. 

இந்த நிலையில் நேற்று வீட்டில் இருந்த இராமநாதனுடன் இதுகுறித்து கேள்வி எழுப்பி மனைவி அனுராதா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த இராமநாதன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவி அனுராதாவை வயிறு கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் குத்தியுள்ளார். 

ALSO READ | சிறைச்சாலையில் செல்போன்: கைதிகளுக்கு அதிகாரிகளே உதவினார்களா? 

வலிதாங்க முடியாமல் துடித்த அனுராதா சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செல்வபுரம் போலிசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் கனவன் இராமநாதனை கைது செய்த போலிசார் நீதிமற்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

வேலைக்கு போகச்சொன்ன மனைவியை குத்திக்கொன்ற கனவனின் வெறிச்செலலால் அப்பகுதி மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

ALSO READ | கோவையில் தொடரும் கஞ்சா வேட்டை 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News