JACTO-GEO வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு....

நாளை முதல் நடைபெறவிருந்த ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது! 

Last Updated : Dec 3, 2018, 02:00 PM IST
JACTO-GEO வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு.... title=

நாளை முதல் நடைபெறவிருந்த ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது! 

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்துதல், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்குதல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைதல் உள்ளிட்ட கோரிக்கைகளை, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், டிசம்பர் 4 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் எனவும் அறிவித்தனர். இதற்கு பதிலளித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் வழக்காக தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த மதுரை கிளை விசாரித்தது. 

இந்நிலையில், டிசம்பர் 10 ஆம் தேதி அரையாண்டுத்தேர்வு துவங்க உள்ள நிலையில், ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது. இந்த முறையீட்டை ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை, திங்கள் கிழமை வரை போராட்டத்தை ஒத்திவைக்கப்படுமா? என ஜாக்டோ ஜியோ தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

இதையடுத்து, தற்காலிகமாக போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக ஜாக்டோ ஜியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாக்டோ ஜியோ கோரிக்கை குறித்து தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக வரும் 10 ஆம் தேதிக்குள் தமிழக அரசு அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

Trending News