CRIME : மகளை பழிதீர்க்க தாயை கடத்தி கொன்று புதைத்த கொடூரம்

சங்கராபுரம் அருகே மகள் வாங்கிய பணத்திற்காக தாயை கடத்திச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்து புதைத்த தந்தை மற்றும் மகன் கைது !!

Written by - Gowtham Natarajan | Last Updated : Jun 28, 2022, 02:52 PM IST
  • மகள் வாங்கி பணத்திற்கு தாய் கொலை
  • தந்தை மகன் வெறிச்செயல்
  • போலீசில் கொடுத்த பரபரப்பு வாக்குமூலம்
CRIME : மகளை பழிதீர்க்க தாயை கடத்தி கொன்று புதைத்த கொடூரம் title=

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த புதூர் சுடுகாடு பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மர்மமான முறையில் மூடப்பட்டிருந்த குழி அப்பகுதி பொதுமக்களை பொதுமக்களை அச்சத்தில் உறைய வைத்தது. பின்னர் அவர்களின் கோரிக்கையை ஏற்று வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் இணைந்து அந்த மர்ம குழியை தோண்டி பார்த்தனர். 

அப்போது சாக்கு மூட்டையில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்கப்பட்டது. பின்னர், அப்பகுதியிலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. தொடர்ந்து கொலை செய்யப்பட்ட பெண் யார் ? அவரை கொலை செய்தது யார் என்பது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

crime,murder,kallakurichi,arrest, மகள் வாங்கிய பணத்திற்காக தாயை,தாயை கடத்தி கொன்று புதைத்த கொடூரம்

முதற்கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் விரியூர் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி மனைவி ஆண்டாள் என்பது தெரியவந்தது. கொலையாளிகளை போலீசார் நெருங்குவதற்குள் அவர்களே போலீசில் சரணடைந்திருக்கிறார்கள். சங்கராபுரம் அருகே உள்ள விரியூர் கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி மற்றும் அவரது மகன் விக்னேஷ் இருவரும் ஆண்டாள் கொலை வழக்கு தொடர்பாக கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். 

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கொலைக்கான அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. கொல்லப்பட்ட ஆண்டாளின் மகள் தனலட்சுமி மொத்த அரிசி வியாபாரம் செய்து வருகிறார். அவரிடம் அரிசி வாங்கி வியாபாரம் செய்வதற்காக 15 லட்சத்தை வீராசாமி கொடுத்துள்ளார். ஆனால் பல மாதங்கள் ஆன பின்பும் தனலட்சுமி அரிசி வாங்கி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

crime,murder,kallakurichi,arrest, மகள் வாங்கிய பணத்திற்காக தாயை,தாயை கடத்தி கொன்று புதைத்த கொடூரம்

இதனை அடுத்து தான் கொடுத்த பணத்தை திரும்ப தருமாறு தனலட்சுமியிடம் வீராசாமி கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை திரும்ப கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனலட்சுமியை தேடி அவரது வீட்டிற்கு வீராசாமியின் மகனான விக்னேஷ் சென்றிருக்கிறார். 

ஆனால் அங்கு தனலட்சுமி இல்லை.  இதனையடுத்து அங்கிருந்த ஆண்டாளிடம் உனது மகள் எங்களுடைய பணத்தை தராமல் ஏமாற்றி வருகிறார் என்று கூறி மிரட்டியிருக்கிறார். எனவே, நீ எங்களது வீட்டிற்கு வா அப்படி வந்தால் உன்னை தேடி உனது மகள் எனது வீட்டிற்கு வருவாள் என கூறி ஆண்டாளை வீராசாமி தனது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். இருப்பினும் ஆண்டாளை தேடி தனலட்சுமி வராததால் ஆத்திரமடைந்த வீராசாமி மற்றும் விக்னேஷ் இருவரும் சேர்ந்து ஆண்டாளை தாக்கியதோடு சேலையால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர்.

crime,murder,kallakurichi,arrest, மகள் வாங்கிய பணத்திற்காக தாயை,தாயை கடத்தி கொன்று புதைத்த கொடூரம்

பின்னர் கொலையை மறைக்க ஆண்டாளின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி இரு சக்கர வாகனத்தில் கொண்டு வந்து புதூர் சுடுகாட்டில் குழிதோண்டிப் புதைத்துவிட்டுத் தப்பியோடினர். கொலை வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்ததால் எப்படியும் காவல்துறையினரிடம் சிக்கிக் கொள்வோம் என்ற அச்சத்தில் கிராம நிர்வாக அலுவலரிடம் சரண் அடைவதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். 

மேலும் படிக்க | செங்கல்லால் கணவரை அடித்து கொன்ற மனைவி - கொல்லப்பட்டவரின் தம்பி கொடுத்த பகீர் வாக்குமூலம்

இதனை அடுத்து தந்தை மற்றும் மகன் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மகள் வாங்கிய பணத்திற்காக அவரது தாயை கடத்திச் சென்று தாக்கி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | சினிமா பாணியில் ஸ்கெட்ச் செய்து கொலை! பழிக்கு பழி வாங்கிய தம்பி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News