காஞ்சிபுரம் : பெற்ற மகள்களை துடிதுடிக்க கொலை செய்த கொடூர தந்தை

காஞ்சிபுரம் அருகே பெற்ற மகள்களை தந்தையே போதையில் அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Written by - Gowtham Natarajan | Last Updated : May 20, 2022, 06:01 PM IST
  • போதையில் தந்தை வெறிச்செயல்
  • இரண்டு மகள்களை அடித்துக் கொன்ற சம்பவம்
  • போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலம்
காஞ்சிபுரம் : பெற்ற மகள்களை துடிதுடிக்க கொலை செய்த கொடூர தந்தை title=

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட சின்ன மதுரபாக்கம் பகுதியில் வசித்துவருபவர் கோவிந்தராஜ்(40), கீதா(35) தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் என நான்கு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான கோவிந்தராஜ், அடிக்கடி குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் கோவிந்தராஜ், அடிக்கடி மனைவி கீதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவது வழக்கமானது. இதனால் அவர்களின் வீட்டில் நிம்மதி என்பது உருக்குலைந்தே கிடந்தது.

Crime,murder,kanchipuram,police,arrest,துடிதுடிக்க கொலை செய்த தந்தை

இந்நிலையில், சம்பவத்தன்று கீதா வேலை சென்ற நேரத்தில், தலை நிற்காமல் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கோவிந்தராஜ் தனியாக இருந்த மகள்களிடம் தாயை கேட்டு அதட்டியிருக்கிறார். குடித்துவிட்டு இப்படி வீட்டிற்கு வந்து அம்மாவை மிரட்டுவதை நிறுத்துங்கள் என மூத்த மகள் நந்தினி மற்றும் கடைசி மகள் தீபாவும் கேட்க, அதனால் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ் கொலைகார புத்திக்குள் நுழைந்திருக்கிறார். பெற்ற மகள்கள் என்றும் பாராமல் கொடூரமாக அவர்களை தாக்கியிருக்கிறார். அதில் சிறுமிகளின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது.

Crime,murder,kanchipuram,police,arrest,துடிதுடிக்க கொலை செய்த தந்தை

சுயநினைவை இழந்த சிறுமிகள் சுருண்டு விழுந்தனர். அவசர ஊர்த்திக்கு தகவல் தெரிவித்த நிலையில் அங்கு வந்த அவர்கள் ஏற்கனவே சிறுமிகள் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் ஒரகடம் போலீசாருக்கு தகவல் அளித்து கோவிந்தராஜனுக்கு தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து இரண்டு சிறுமிகளின் பிரேதங்களை கைபற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Crime,murder,kanchipuram,police,arrest,துடிதுடிக்க கொலை செய்த தந்தை

மேலும் படிக்க | தந்தையை துண்டு துண்டாக வெட்டி குழித்தோண்டி புதைத்த மகன்

இரண்டு சிறுமிகளை கொன்ற கொடூர தந்தை கோவிந்தராஜனிடம் தற்போது போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் வேலைக்குச் சென்றிருந்த நிலையில் தனது இரண்டு மகள்களையும் தந்தையே அடித்து கொன்ற சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | பழனி : உண்டியல் காணிக்கை எண்ணும் போது தங்க‌நகைகளை திருடிய பெண் ஊழியர்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News