பாலகிருஷ்ண ரெட்டி-க்கு எதிரான மனு தள்ளுபடி -உயர்நீதிமன்றம்!

எதிர்வரும் இடைத்தேர்தலில் மனைவிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய பாலகிருஷ்ண ரெட்டிக்கு எதிரக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

Last Updated : Apr 11, 2019, 03:34 PM IST
பாலகிருஷ்ண ரெட்டி-க்கு எதிரான மனு தள்ளுபடி -உயர்நீதிமன்றம்! title=

எதிர்வரும் இடைத்தேர்தலில் மனைவிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய பாலகிருஷ்ண ரெட்டிக்கு எதிரக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் சிக்கியுள்ள ஓசூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ண ரெட்டி, வரும் தேர்தலில் தனது மனைவிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள கூடாது என ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தி மனு தாக்கல் செய்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது., பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் ஓசூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டிக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது, இதன் காரணமாக அவர் தன்னுடைய எம்.எல்.ஏ., அமைச்சர் பதவியை இழந்தார்.

எனவே அவர் எம்.எல்.ஏ.வாக இருந்த ஓசூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ணரெட்டி, மனைவியை அ.தி.மு.க. சார்பில் வேட்பாளராக்கியுள்ளார்.

தற்போது சிறை தண்டனை பெற்ற பாலகிருஷ்ணரெட்டி, மனைவிக்காக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றார். குற்ற வழக்கில் தண்டனை பெற்றவர்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது. ஆனால், அவர் மனைவிக்காக பிரசாரம் செய்கிறார். எனவே அவரது பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதற்கிடையே, நீதிமன்ற தண்டனையால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட பாலகிருஷ்ணா ரெட்டி பரப்புரை மேற்கொள்ளக் கூடாது என அ.ம.மு.க-வின் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.

வெளியான தீர்பில் ஒசூர் வேட்பாளர் ஜோதிக்கு ஆதரவாக பாலகிருஷ்ணா ரெட்டி பிரசாரம் செய்ய தடையில்லை எனவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தேர்தல் நடத்தை விதிகள் படி எந்தத் தடையும் இல்லை எனவும் உத்தரவு பிரப்பித்தது. இதையடுத்து, புகழேந்தியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

Trending News