ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் சடலம்: கொலையா? தற்கொலையா?

கடன் தொல்லையால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டாரா, கொலை செய்யப்பட்டாரா, அல்லது, இது இயற்கையான மரணமா என்பது இன்னும் தெரியவில்லை.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 25, 2021, 03:36 PM IST
ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் சடலம்: கொலையா? தற்கொலையா? title=

திருப்பத்தூர் அருகே ரயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் வாலிபர் இறந்து கிடப்பது கண்டறியப்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது இது இயற்கையான மரணமா என சந்தேகம் எழும்பியுள்ளது. 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் என்கிற சாந்தகுமார். இவருக்கு வயது 40. இவர் டைல்ஸ் வேலை செய்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி மேகலா என்ற மனைவியும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவருக்கு அதிக அளவில் கடன் தொல்லை இருப்பதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 

இந்த நிலையில், நேற்று இரவு சாந்தகுமார் வீட்டைவிட்டு வெளியே சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வராததால் பதற்றமடைந்த உறவினர்கள் நேற்று இரவு முதல் சாந்தகுமாரை தேடி பார்த்தனர். எவ்வளவு தேடியும் அவர்களால் சாந்தகுமாரை கண்டுபிடிக்க முடியவில்லை. 

இதைத் தொடர்ந்து சாந்தகுமார் இன்று திருப்பத்தூர் அடுத்த சு.பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது. 

ALSO READ | டாஸ்மாக் பாரில் பிறந்த நாள் கொண்டாட்டம்: இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு 

கடன் தொல்லையால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டாரா, கொலை செய்யப்பட்டாரா, அல்லது, இது இயற்கையான மரணமா என்பது இன்னும் தெரியவில்லை.

சாந்தகுமார் இறந்து கிடந்ததைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் திருப்பத்தூர் கிராமிய போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் உடலை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், சாந்தகுமாரின் உடலில் ரயிலில் அடி பட்டது போல் காயங்கள் இல்லை என உறவினர்கள் சந்தேகிக்கின்றனர்.

சாந்தகுமாரின் மரணத்திற்கு காரணம் கொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ALSO READ | கள்ளக்காதல் ஜோடி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News