டாஸ்மாக் பாரில் பிறந்த நாள் கொண்டாட்டம்: இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு

மது அருந்திய பின்னர் நண்பர்கள் அனைவரும் குப்புராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது நுரை வரும் ஸ்பிரேவை நண்பர்கள் அவர் மீது தெளித்து உள்ளனர்.

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 25, 2021, 10:45 AM IST
டாஸ்மாக் பாரில் பிறந்த நாள் கொண்டாட்டம்: இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு title=

கோவை உக்கடம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த மனோகரன் என்பவரின் மகன் பிரகாஷ். இவருக்கு வயது 21. நேற்று இரவு பிரகாஷின் நண்பர் குப்புராஜின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக இவர்கள் சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்றனர்.

இதனையடுத்து, மது அருந்திய பின்னர் நண்பர்கள் அனைவரும் குப்புராஜுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். அப்போது நுரை வரும் ஸ்பிரேவை நண்பர்கள் அவர் மீது தெளித்து உள்ளனர்.

அந்த சமயத்தில் பக்கத்து டேபிளில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த 38 வயது இப்ராஹிம் மற்றும் அவரது நண்பர்கள் மீது இந்த ஸ்ப்ரே தெறித்துள்ளது. இதையடுத்து இப்ராகிம் மற்றும் நண்பர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர்.

இதனைத்தொடர்ந்து இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றிய நிலையில் ஒருவருக்கொருவர் தாக்கத் துவங்கினர்.

ALSO READ | மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பிய ஆசிரியர் மாணவர்கள் போராட்டத்துக்குப் பின் பணியிடை நீக்கம்

பின்னர், பீர் பாட்டிலை எடுத்து பிரகாஷ் மற்றும் உடன் வந்திருந்த பிரபு ஆகியோரை இப்ராகிம் உட்பட அவரது நண்பர்கள் அடித்துள்ளனர். தலையில் அடிபட்டதால், இருவருக்கும் மண்டை உடைந்து ரத்தம் வழிந்தோடியது.

இதைப்பார்த்து ஆத்திரமடைந்த பிரகாஷ் உடன் வந்திருந்த நண்பர்கள் இப்ராகிம் மற்றும் அவரது நண்பர்கள் மீது பாட்டில்கள் மற்றும் சேர் டேபிள்களை தூக்கி வீசினர். இதில் இப்ராகிம் உட்பட அவரது நண்பர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தோடியது. நிலைமை கலவரமாகி போவதை அறிந்த டாஸ்மாக் பார் ஊழியர்கள் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போர்க்களம் போல காட்சியளித்த அந்த இடத்தில் காயமடைந்து கிடந்த அனைவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதனைத்தொடர்ந்து, பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் இப்ராகிம் உட்பட 3 பேர் மீதும் இப்ராகிம் அளித்த புகாரின் பேரில் பிரகாஷ் உட்பட 5 பேர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ALSO READ | புதுச்சேரி: சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு பத்து ஆண்டுகள் சிறை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News