பிஎஸ்என்எல் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி கலாநிதி மாறன் மனு!

Last Updated : Oct 3, 2017, 12:01 PM IST
பிஎஸ்என்எல் வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி கலாநிதி மாறன் மனு!  title=

பிஎஸ்என்எல் இணைப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி கலாநிதி மாறன் சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

தயாநிதிமாறன் மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்த போது, தனது அதிகாரத்தை பயன்படுத்தி பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக கலாநிதி மாறனின் சன் குழுமத்திற்கு வழங்கியதாக குற்றச்சாட்டப்பட்டார்.

 

 

இந்த முறைகேட்டில் அரசுக்கு 1,78,00,000 ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவம் தயாநிதுமாறன் மீது தொடரப்பட்ட வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

இதனையடுத்து இன்று சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி கலாநிதி மாறன் சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

Trending News